பேட்டரி கழிவுகளை சுத்திகரித்து உலோகங்களை பிரித்தெடுக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
பெங்களூருவைச் சேர்ந்த Metastable Materials நிறுவனம், இந்தியாவின் அதிகரிக்கும் பேட்டரி கழிவுகள் பிரச்சனைக்கு மறுசுழற்சி சுத்தகரிப்பு மூலம் பதில் அளிக்கிறது.
பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மூலப்பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதே நேரத்தில், பயன்படுத்திய லித்தியம் அயான் பேட்டரிகளில் இந்த பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதோடு, ஆண்டுதோறும் இவை அதிகரித்து வருகின்றன.
இப்படி பயன்படுத்திய பேட்டரிகள் தூக்கியெறியக்கூடிய கழிவுகள் அல்ல, மீண்டும் சுத்திரிகரிக்கக் கூடிய தன்மை கொண்டவை எனும் எண்ணத்தின் அடிப்படையில் பெங்களூருவைச் சேர்ந்த ’மெட்டாஸ்டேபில் மெடிரியல்ஸ்’ (Metastable Materials) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
2021ல் ரூர்கேலா ஐஐடி பட்டதாரிகள் சுபம் விஸ்வகர்மா மற்றும் மணிகுமார் உப்பாலாவால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், பயன்படுத்திய பேட்டரிகளில் இருந்து லித்தியம், கோபால்ட், தாமிரம், அலுமினியம் ஆகியவற்றை பிரித்தெடுத்து விற்பனை செய்கிறது.

நிறுவனர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது இதற்கான உந்துதலை பெற்றனர். உப்பாலா, மெக்கானிகல் மற்றும் மெட்டிரியல் பொறியிய படித்தவர் பின்னர், என்பிசி பியரிங்ஸ் நிறுவனத்தில் மெஷின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்தினார். விஸ்வகர்மா அதே நிறுவனத்தில் மேம்பட்ட பொருட்கள் பிரிவில் பணியாற்றினார்.
பேட்டரிகளில் இருந்து உலோகம்
நிறுவனம் பயன்படுத்திய லித்தியம் பேட்டரிகளை வாங்கி, அவற்றை சுத்திகரித்து அதிக தூய்மை கொண்ட உலோகங்களை பிரித்தெடுக்கிறது.
“நாங்கள் நீடித்த தன்மை கொண்ட மூலப்பொருட்களை வழங்குகிறோம். மேலும் நாங்கள் நல்ல முறையில் சுத்திகரிப்பும் செய்கிறோம்,” என்கிறார் விஸ்வகர்மா.
பேட்டரிகளை கொள்முதல் செய்வது முதல் அவற்றை சுத்திகரித்து உலோகங்களை பிரித்தெடுப்பது வரையான செயல்முறை முழுமையாக இருக்கிறது, பேட்டரிகள் இடர் தவிர்ப்பிற்காக தண்ணீருக்கடியில் உடைக்கப்படுகின்றன.
பெரும்பாலான மறுசுழற்சி செயல்பாடுகளுக்கு உலோகங்கள் இடையிலான பிணைப்பை உடைக்க ரசாயனம் பயன்படுத்த வேண்டும். மெடாஸ்டேபில் செயல்முறை அவ்வாறு அமையவில்லை.
“பேட்டரிக்குள் இருக்கும் ஒரு பொருளுடன் மற்றொரு பொருள் தொடர்பு கொள்வதற்கான வழியை கண்டுபிடித்துள்ளோம். வெளியில் இருந்து எந்த ரசாயனமும் சேர்ப்பதில்லை,” என்கிறார் விஸ்வகர்மா.
வேதியல் செயல்பாடுகள் முடிந்த பிறகு, தனி உலோகங்கள் அவற்றின் தன்மைக்கேற்ப பிரித்தெடுக்கப்படுகின்றன. தாமிரம் அழுத்தம் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. லித்தியம் தண்ணிரில் கரைகிறது. நிக்கல் மற்றும் கோபால்ட் காந்த சக்தி மூலம் பிரிகின்றன.
”இது எளிமையான ஆனால் திறன் மிக்க செயல்முறை,” என்கிறார்.
இந்த செயல்முறைக்கு தேவையான எல்லாவற்றையும் நிறுவனம் சொந்தமாக உருவாக்கியது.
நிறுவனம் தனக்கான இந்திரங்களையும் பெரும்பாலும் வடிவமைத்து தயாரிக்கிறது. மேக்னடிக் சபரேட்டர், டென்சிட்டி சபரேட்டர், பாய்லர்கள், பர்சனஸ்கள், மில்கள் இதில் அடங்கும்.
இந்தியாவின் பூஜ்ஜியம் திரவ வெளியீடு அமைப்பையும் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. மறுசுழற்சியின் போது உண்டாகும் அனைத்து திரவ கழிவுகளும் அதே இடத்தில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒரு சர்வதேச மனு உள்ளிட்ட ஐந்து காப்புரிமைகள் நிறுவனம் கொண்டுள்ளது.
உலோகங்கள் எதற்காக?
பேட்டரி சார்ந்த குறிப்பிட்ட பொருட்கள் அல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட பண்டக உலோகங்களை நிறுவனம் உற்பத்தி செய்வதால், அதன் வாடிக்கையாளர் பரப்பு பேட்டரி துறையை கடந்து அமைந்துள்ளது.
லித்தியம், கண்ணாடி தயாரிப்பாளர்கள், செராமிக் உற்பத்தியாளர்கள், சிமெண்ட் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. நிக்கல் சர்வதேச அளவில் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் துறையால் கொள்முதல் செய்யப்படுகிறது.
தூய்மை, மாசு அளவுகள் மற்றும் பொருட்கள் அளவு தொடர்பான துறை கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவது தொடர் சவாலாக இருப்பதாக விஸ்வகர்மா கூறுகிறார். கோபால்ட் பிக்மெண்ட் உற்பத்தி மற்றும் காந்த தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தாமிரம் காஸ்டிங் மற்றும் பார் தயாரிப்பில் பயன்படுகிறது. அலுமினியம் ஆட்டோமேட்டிவ் காஸ்டிங்கில் பயன்படுகிறது.
நிறுவனம் பேட்டரிகளை, உள்ளூர் ஸ்கிரேப் டீலர்கள் முதல் பெரிய இரு சக்கர, நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறது. பேட்டரிகளை பாதுகாப்பாக கையாள்வதற்காக சப்ளையர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
பெரிய அளவில் சப்ளையில் ஈடுபடுவதற்கு முன் வாடிக்கையாளர்களுடன் பேசி, பிராடக்ட் தேவையை தெரிந்து கொள்கிறது. உதாரணமாக, காந்த தயாரிப்பாளர்கள் எனில், கோபால்டில் மாங்கனீசு மாசு அளவு எந்த அளவு இருக்கலாம், என தெரிந்து கொள்வதாக அமைகிறது. ஏனெனில், மாங்கனீசு காந்த செயல்பாட்டை பாதிக்கும். என்.எம்.சி, செல் தயாரிப்பாளர்கள் மற்றொரு முக்கிய வாடிக்கையாளர் பிரிவாக அமைகின்றனர்.
நிறுவன வர்த்தக மாதிரி எளிமையானது. நிறுவனம் பேட்டரிகளை சந்தை விலைக்கு வாங்கி, சுத்தரித்து பண்டக சந்தைகளில் விற்கிறது. லண்டன் உலோக சந்தை, ஷாங்காய் சந்தை, மும்பை உலோக சந்தை உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தூய்மை, அளவு மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்ப இறுதி விலை அமைகிறது.
2025 முதல் வருவாய் கிடைக்கிறது. நிறுவனத்தின் பெங்களூரு ஆலை ஆண்டுக்கு 1500 டன் செயல்திறன் கொண்டது. ஒவ்வொரு காலாண்டிலும் கொள்ளலவு பயன்பாடு இரு மடங்காகி உள்ளது.
80 முதல் 90 சதவீத கொள்ளலவு பயன்பாட்டை எட்ட வேண்டும் என்பதே இலக்கு என்கிறார் விஸ்வகர்மா.
ஐஎம்.ஏ.அஅர்சி குழும ஆய்வுபடி, சர்வதேச மறுசுழற்சி சந்தை 2025ல் 18 பில்லியன் டாலராக இருந்தது, 2034ல் 32.9 பில்லியன் டாலராக அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், இந்த சந்தையில், அட்டாரோ ரீசைக்ளிங், லோஹம், பேடெக்ஸ் எனர்ஜிஸ், டாடா கெமிகல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் மெடாஸ்டேபில் போட்டியிடுகிறது.
வளர்ச்சி திட்டம்
நிறுவனம் இது வரை இரண்டு சுற்று நிதி திரட்டியுள்ளது. 2022ல் லாக்9 மெடிரியல்ஸ் கார்திக் ஹஜேலா மற்றும் அக்ஷய் சிங்கால் தலைமையிலான சுற்றில் நிதி திரட்டியது. பின்னர், 2023ல் சர்ஜ், ஸ்பெஷல் இன்வெஸ்ட், தேஜா வென்சர்ஸ், Climate9ers உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து விதை நிதி திரட்டியது. நிதி அளவை நிறுவனம் குறிப்பிடவில்லை.
இரண்டு ஆலைகள் அமைக்கவும், காப்புரிமை விண்ணப்பிக்க மற்றும் 50 பேருக்கு மேலான குழுவை உருவாக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. இப்போது உற்பத்தி அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
“இது சிறந்தது என உணர்த்தியுள்ளோம். எனவே இப்போது மேலும் பெரிதாக வளர வேண்டும். இயன்ற அளவு வேகமாக உருவாக்குவோம். ஆலைகளை உருவாக்க காலம் தேவை,” என்கிறார் விஸ்வகர்மா.
இதனால் நிறுவனம் மேலும் ஆலைகள் மற்றும் அவற்றை இயக்க குழுக்களை நாடுகிறது.
2024 முதல் மெட்டாஸ்டேபில் ஒரு அலுவலகம் மற்றும் இரண்டு ஆலைகள் கொண்டு இயங்குகிறது. பெங்களூரு மற்றும் தில்லியில் ஆலைகள் அமைந்துள்ளன.
அடுத்த கட்டம் விரிவாக்கம் சார்ந்து இருக்கிறது. இதற்கு ஏற்ற இடத்தை தேடி விஸ்வகர்மா ராஜஸ்தானில் பயணம் செய்து வருகிறார். புதிய செயல்முறைகளையும் நிறுவனம் உருவாக்கி வருகிறது. காப்புரிமை விண்ணப்பங்களிலும் கவனம் செலுத்துகிறது. 2026ல் பெரிய அளவில் வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில்: ராஷ்மி கேட்லாண்டே, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

