இந்தியாவுக்கான ஏஐ நுட்ப திட்டங்களில் கவனம் செலுத்தும் கூகுள் - முக்கிய அறிவிப்புகள்!
புதிய ஏஐ மாதிரிகளை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல், டெவலப்பர்கள், வர்த்தகங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஏஜெண்டிக் ஏஐ நுட்பத்தை செயலாக்குவதற்கு உதவுவதில் வலுவாக கவனம் செலுத்துவதை உணர்த்தும் வகையில் கூகுள், இந்தியாவுக்கான பரவலான ஏஐ திட்டங்களை அறிவித்துள்ளது.
புதிய ஏஐ மாதிரிகளை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல், டெவலப்பர்கள், வர்த்தகங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஏஜெண்டிக் ஏஐ நுட்பத்தை செயலாக்குவதற்கு உதவுவதில் வலுவாக கவனம் செலுத்துவதை உணர்த்தும் வகையில் கூகுள், இந்தியாவுக்கான பரவலான ஏஐ திட்டங்களை அறிவித்துள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற கூகுள் ஐ/ஒ கனெக்ட் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சுகாதார நலன், வர்த்தக உள்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் டெவலப்பர் கருவிகள் உள்ளிட்ட பிரிவுகள் சார்ந்த இந்த அறிவிப்புகள், பெரிய அளவில் ஏஐ ஏற்பில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதில் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாட்டை உணர்த்துகின்றன.
ஏஐ பரப்பின் அடுத்த கட்டம் மேலும் திறன் வாய்ந்த ஏஐ மாதிரிகளை மட்டும் அல்லாமல், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, அவற்றை பொறுப்பாக பயன்படுத்துவதற்கான உள்ளூர் கூட்டு ஆகியவற்றால் வரையறுக்கப்படும் எனும் கூகுளின் அணுகுமுறையையும் இந்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

புதிய பொருட்கள் மற்றும் ஆய்வு சார்ந்த கூட்டு முயற்சிகள் தவிர, ஏற்கனவே உள்ள மேடைகளின் பொருளாதார பங்களிப்பையும் நிறுவனம் சுட்டிக்காட்டியது. கூகுள் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு மேடைகள் இந்திய செயலிகள் உருவாக்குனர்களுகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு 2025ல் 5.3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக மூன்றாம் தரப்பு ஆய்வுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 25 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த கூகுள் இந்தியா கண்ட்ரி மேலாளர் பிரித்தி லோபனா, நாட்டின் பரப்பு மற்றும் நிஜ உலக பிரச்சனைகளுக்காக ஏஐ நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் காரணமாக இந்தியா உலகின் மிக முக்கியமான ஏஐ சந்தைகளில் ஒன்றாக உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.
“நோக்கம் மற்றும் இந்தியாவின் பரப்பை சாதகமாக கொண்டு ஏஐ தலைமை சார்ந்த புதிய யுகத்தை வழிநடத்துவதன் மூலம், நிகழ் நேரத்தில் உலக தொழில்நுட்ப பரப்பை இந்தியா வடிவமைத்து வருவதை பார்த்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
“இந்தியா ஏஐ நுட்பத்தின் அளப்பறிய ஆற்றலை சுட்டிக்காட்டியுள்ளதோடு, ஆற்றல் மிக்க உலகளாவிய மேம்பாடுகள் கோட்பாடு மற்றும் ஆய்வகங்களை கடந்து நடைமுறை தாக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் போதே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதையும் உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு, ஏஐ மாதிரிகள், டெவலப்பர் கருவிகள், அரசு, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுடன் கூட்டு ஆகியவை இணைந்த புல் ஸ்டேக் அணுகுமுறையை கூகுள் பின்பற்றுவதாக தெரிவித்தார்.
கூகுள் வெளியிட்ட அறிவிப்புகள் அதன் பரவலான உத்திகளை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தன, இவை கூகுள் குறிப்பிடும் ஏஜெண்டிக் யுகத்தை மையமாக கொண்டிருந்தன.
இந்த அமைப்புகளை நோக்கிய மாற்றத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும், என்று லோபனா கூறினார்.
“இந்தியாவில் உள்ளவர்கள் வேறு எங்கும் இருப்பவர்களை விட வேகமாக ஏஐ நுட்பத்தை செயல்படுத்தி வருகின்றனர். ஏஐ கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து செயல்களை செயல்படுத்துவதற்கு மாறும், ஏஜெண்டிக் யுகத்திற்கு நாம் மாறி வரும் நிலையில், பாதுகாப்பாக கையாள்வதற்காக சூழலுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுப்பாடுகளை அளிப்பதில் நமது கவனம் இருக்கிறது,” என்றும் கூறினார்.
அடிப்படை பணிகள்
அறிவிப்புகளின் குறிப்பிடத்தக்க பகுதி வர்த்தக ஏஐ உள்கட்டமைப்பு சார்ந்து அமைந்திருந்தன. கூகுள் கிளவுட் முதன்மை தூதர், ரிச்சர்டு செரோட்டர், கூகுள் விநியோக கூகுள் மூலம் ஜெமினி சேவை வழங்கப்படுவது, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இயங்கும் அரசு அமைப்புகள் மற்றும் வர்த்தகங்கள், இந்திய தரவு மையங்களில் நவீன ஏஐ மாதிரிகளை இயக்க வழி செய்யும் என்றார்.
துணை சேவைகளும், பொது இணையத்துடன் இணைக்கப்படாமல் இயக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நிறுவனங்கள் உள்ளூர்மயமாக்கல் தேவையை நிறைவேற்றும் வகையில் ’ஜெமினி பிளேஷ் 3.5’ இங்குள்ள இயந்திர கற்றல் அமைப்புக்குள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
பிரத்யேகமான சைபர் பாதுகாப்பு ஏஜெண்ட் செக்சி- ஜெமினியையையும் கூகுள் அறிமுகம் செய்தது. அரசு அமைப்புகள் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவன சோதனையாளர்களுக்கு இது வழங்கப்படும். சிக்கலான பாதுகாப்பு தகவல்களை அலசி, சைபர் தாக்குதல்களை வேகமாக ஆய்வு செய்ய இந்த பாதுகாப்பு குழுக்களுக்கு உதவும்.
தானியங்கி ஏஐ அமைப்புகள் பாதுகாப்பை மேம்படுத்தும் ஓபன் சோர்ஸ் சார்ந்த CAPSEM அமைப்பையும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அமைப்பு தனது சொந்த மெய்நிகர் இயந்திரத்தில் ஒவ்வொரு ஏஐ ஏஜெண்ட்களையும் தனிமைபடுத்து, தாக்குதலுக்கு உள்ளான ஏஜெண்ட் மொத்த அமைப்பிற்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை இது குறைக்கிறது.
இந்த தொழில்நுட்பங்கள் தவிர, பாதுகாப்பான ஏஐ பரிமாற்றங்களுக்கான திறந்த வெளி நிர்ணயங்களையும் கூகுள் அறிவித்துள்ளது. களவாடப்பட்ட பிரவுசர் அமர்வு குக்கிகள் மறு பயன்பாடு செய்யப்படுவதை தடுக்கும் சேவை உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஏஜெண்டிக் ஏஐ பாதுகாப்பு தொடர்பான ஆய்விற்காக ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி தில்லியுடனான கூட்டு முயற்சியையும் கூகுள் விரிவாக்கியுள்ளது. எதிர்வரும் தாக்குதல்களை கண்டறிவது மற்றும் வர்த்தக நிறுவன இடர்களை குறைக்க உதவும் கார்டியன் ஏஜெண்ட்களை உருவாக்குவது ஆகியவை இதில் அடங்கும்.
வகுப்பறையில் இருந்து …
கல்வி துறைக்கான அறிவிப்புகளும் முக்கியமாக இடம்பெற்றுள்ளன. கூகுள் டீப்மெண்ட் தனது ஏஐ ஆய்வு அறக்கட்டளை பாடத்திட்டத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த இலவச 56 மணி நேர பாடத்திட்டம், மொழி மாதிரிகளை உருவாக்கி, மேம்படுத்துவது தொடர்பாக கற்றுத்தருகிறது. இதில் பங்கேற்பவர்கள் கூகுள் கிளவுட் பேட்ஜ் பெறலாம்.
இந்த பாடத்திட்டம் நாஸ்காம் மற்றும் இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றுடனான கூட்டு முயற்சி மூலம் வழங்கப்படும். கூகுள்.ஆர்க் மூலம் பரவலான அணுகல் கிடைக்கும். அடல் இன்னவேஷன் திட்டத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஏடிஎல் சாத்தியையும் கூகுள் டீப்மைண்ட் அறிமுகம் செய்கிறது. ஜெமினி சார்ந்து இயங்கும் இந்த சேவை பாடங்கள் தயாரிப்பு மற்றும் நடைமுறை சார்ந்த வகுப்பு சோதனைகளை தயாரிக்க உதவுகிறது. முதலில் 100 பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் 10,000 பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
சுகாதார நலனும் கூகுள் கவனம் செலுத்தும் பிரிவாக உள்ளது. எய்ம்ஸ் தில்லி ஆய்வாளர்கள் கூகுளின் மெட்ஜெம்மா பல நோக்கு மாடல்களை கொண்டு இந்தியா சார்ந்த தீர்வுகளை உருவாக்கி வருகின்றனர்.
“கூகுள் கூட்டு மற்றும் ஆதரவு வரவேற்க தக்கது. மெட்ஜெம்மா மாதிரியின் ஆற்றல் ஏற்கனவே பல பிரிவுகளில் நல்ல பலன் அளித்துள்ளது. தொழுநோய் மற்றும் பிறப்பு சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் இதன் விரிவாக்கம் நல்ல பலன் தரும்,” என எய்ம்ஸ் டாக்டர் சோமேஷ் குப்தா கூறியுள்ளார்.
ஜெமினி லைவ் இப்போது, வடமொழி, போஜ்பூரி உள்ளிட்ட 25 மொழிகளை ஆதரிப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை அணுக இது உதவும்.
இந்திய நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் கூகுள் ஏஐ மாதிரிகளை எப்படி பயன்படுத்தி வருகின்றன என்பதையும் இந்த நிகழ்ச்சி உணர்த்தியது.
பாலிசிபசார் தனது காப்பீடு மேடையின் ஒரு பகுதியை கூகுள் ஏஐ நுட்பங்கள் கொண்டு மீண்டும் உருவாக்கி, பாலிசி மாற்றத்தில் 50 சதவீத பலன் பெற்றுள்ளது. பயண மேடையான ரெட்பஸ் தனது பதிவு சேவைகளில் இந்த நுட்பத்தை பயன்படுத்தி உரையாடல் சார்ந்த உதவியாளர் வசதியை தகவல்கள் தேட வழங்குகிறது.
எமர்ஜெண்ட், ஆட்யா, வீடியோஎஸ்டிகே, சூப்பர்ஜாய்ன் உள்ளிட்ட நிறுவனங்களும் பல்வேறு பயன்பாட்டிற்கான ஏஐ நுட்ப உதாரணங்களை காட்சிபடுத்தின. ராஜஸ்தான், ஒடிஷா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளுடன் கூட்டு முயற்சியுடன் கூகுள் பிளே அகாடமி பயிற்சியை 10,000 டெவலப்பர்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் டெவலப்பர்கள் நவீன ஏஐ நுட்பத்தை பயன்படுத்தி செயலிகள், கேம்கள் உருவாக்கத்தை மேம்படுத்த வழிகாட்டுகிறது.
யுவர்ஸ்டோரி குழு, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

