Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

ஒருமுறை பயிரிட்டால் வாழ்நாள் முழுக்க விளைச்சலும் வருவாயும் நல்கும் நெல்லிக்காய் சாகுபடி!

நூற்றுக்கணக்கான நோய்களுக்கு அருமருந்தாகக் கருதப்படும் நெல்லிக்காய் ஆயுர்வேத தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நெல்லிக்காய் சாகுபடியில் நல்ல வருவாய் ஈட்டலாம்.

ஒருமுறை பயிரிட்டால் வாழ்நாள் முழுக்க விளைச்சலும் வருவாயும் நல்கும் நெல்லிக்காய் சாகுபடி!

Tuesday March 14, 2023 , 2 min Read

விவசாயத்தில் உடல் உழைப்பு அதிகம். உடல் உழைப்பிற்கு ஏற்றபடி லாபம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏராளமான காரணிகள் இதைத் தீர்மானிக்கின்றன. சில பயிர் வகைகளை விவசாயம் செய்யும்போது உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாது; ஆனால் அதிக வருமானம் கிடைக்கும். அப்படிப்பட்ட விவசாயங்களில் ஒன்று மூங்கில். அடுத்ததாக நெல்லிக்காய் விவசாயத்தை சொல்லலாம்.

ஒருமுறை நெல்லியை பயிரிட்டால் போதும்; வாழ்நாள் முழுக்க விளைச்சல் இருந்துகொண்டே இருக்கும். அத்துடன், நெல்லி மருத்துவ குணம் கொண்டதும் கூட.

நெல்லி சாகுபடியைப் பொறுத்தவரை உத்திரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. அதை அடுத்து மத்தியப் பிரதேசமும் தமிழ்நாடும் உள்ளன.

நெல்லியின் பலன்கள்

நெல்லியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் பாதிக்காமல் பாதுகாக்கிறது. நூற்றுக்கணக்கான நோய்களுக்கு நெல்லிக்காய் அருமருந்தாகக் கருதப்படுகிறது. ஆயுர்வேத தயாரிப்புகளில் நெல்லிக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

கால்சியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ என பல வகையான சத்துக்கள் உள்ளன. புளிப்பும் துவர்ப்பும் நிறைந்த நெல்லிக்காய் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
gooseberry

நெல்லிகாயில் ஊறுகாய், ஜாம், ஜெல்லி போன்றவற்றைத் தயாரிக்கலாம். நெல்லிக்காய் சாப்பிடுவதால் பார்வைத் திறன் மேம்படுகிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். ரத்த ஓட்டம் சீராகும்.

நெல்லி சாகுபடி

வெப்பமான பருவநிலை நெல்லிக்காய் சாகுபடிக்கு உகந்தது. எனவே, வறண்ட பகுதிகளில் நெல்லிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. வெயிலோ பனியோ இந்தச் செடியை பாதிப்பதில்லை. இருப்பினும் முதல் மூன்று ஆண்டுகள் வரை கவனமாக பராமரித்தால் மரம் வளர்ந்துவிடும்.

நெல்லிக்காய் செடியை நடவு செய்வதற்கு முன்பு நிலத்தில் மாட்டுச் சாணம் அல்லது மண்புழு உரம் சேர்க்கவேண்டும். இவை நிலத்திற்கு வளம் சேர்க்கின்றன. இதனால் அதிக மகசூல் கிடைக்கும்.

1 மீட்டர் நீள, அகல, ஆழம் கொண்ட குழியில் நெல்லிக்காய் நடவு செய்யவேண்டும். இரண்டு செடிகளுக்கு இடையே 10 மீட்டர் இடைவெளி இருப்பது அவசியம். வேர் நன்றாக வளரும் வரை 4-5 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சவேண்டும். அதன் பிறகு தேவைக்கேற்ப 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. சொட்டுநீர் பாசன முறையைப் பின்பற்றி நீரை சேமிக்கலாம்.

செலவு மற்றும் லாபம்

நெல்லிக்காய் செடியை நடவு செய்த பிறகு 4-5 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். ஒரு ஆண்டிற்கு சராசரியாக 1 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். 8-9 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும்.

அதாவது, ஒரு மரத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு ஆண்டிற்கு 2000-2500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஒரு ஹெக்டேரில் சுமார் 200 செடிகள் வளர்க்கமுடியும். அதாவது, ஒரு ஹெக்டேர் நிலத்தில் ஆண்டிற்கு 4-5 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.

செலவுகளைப் பொறுத்தவரை ஒருமுறை செடிகளை வாங்கினால் போதும். அதன் பிறகு நீர்பாசனம், பராமரிப்பு, பூச்சிக்கொல்லி, அறுவடை போன்றவற்றிற்கு செலவிட வேண்டியிருக்கும். முறையாக பராமரிக்கும் பட்சத்தில் ஒரு நெல்லிச் செடி 55-60 ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும்.