புதுவகை விளையாட்டு தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்’களுக்கு ஐஐடி மெட்ராஸ் நிதி உதவி செய்ய திட்டம்!
ஸ்டார்ட்-அப் ஒன்றிற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிதி முதலீட்டு ஆதரவை வழங்க இருக்கிறது ஐஐடி மெட்ராஸ்.
தொழில்நுட்பத்திற்கும் விளையாட்டுத் துறைக்கும் இடையே ஆழமான தொடர்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் விதமாக ஐஐடி-மெட்ராஸ் இந்தியாவில் புதுமையான விளையாட்டு-தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கு நிதியளிப்பதை ரூ.5 கோடி வரை நீட்டித்துள்ளது.
அனைத்து விதமான மதிப்பீடுகளுக்குப் பின்னர் ஸ்டார்ட்-அப் ஒன்றிற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிதி முதலீட்டு ஆதரவை வழங்குகிறது.
இந்த ஸ்டார்ட்-அப் தொழில்கள் சென்சார்கள், நெட்வொர்க்குகள், ஆக்சுவேட்டர்கள் மற்றும் கன்ட்ரோலர்களை உள்ளடக்கிய AI மற்றும் IoT அடிப்படையிலான தயாரிப்புகளை ஐஐடி மெட்ராஸில் ஸ்போர்ட்ஸ் டெக் பரமாரிப்பு நிதியை நிறுவுவதற்கு வழிவகுக்கின்றது. IIT-Madras Pravartak Technologies Foundation மற்றும் IIT Madras Centre of Excellence in Sports Science and Analytics (CESSA) ஆகியவற்றால் இந்த நிதி ஆதரவு நீட்டிக்கப்படும் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஸ்போர்ட்ஸ் டெக்கிற்காக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மீடியா மற்றும் பொழுதுபோக்கு/உள்ளடக்கம்/ஸ்ட்ரீமிங் தளம், ரசிகர்/வீரர் ஈடுபாடு/கேமிஃபிகேஷன், விளையாட்டு வீரர்/வீரர் செயல்திறன் - அளவீடு, மேம்பாடு, குழு மற்றும் பயிற்சியாளர் வெற்றி, விளையாட்டு, விளையாட்டு கல்வி, விளையாட்டு தரவு பகுப்பாய்வு மற்றும் அளவீடுகள், நுண்ணறிவு மற்றும் கேமிஃபிகேஷன், விளையாட்டு வர்த்தகம் ஆகியவற்றுடன் ரசிகர்களின் ஈடுபாடு மற்றும் விளையாட்டு சமூகங்கள் ஆகியவை அடங்கும்.
நிதி ஆதரவு தேவைப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்த இணைப்பின் வழி லாக் இன் செய்யலாம்: https://incubation.pravartak.org.in/login
ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில் ஜூன் 14-15 தேதிகளில் 'ஐஐடி மெட்ராஸ் ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் கூட்டம்' நடைபெறுகிறது. அப்போது முதல் கட்ட பட்டியலிடப்பட்ட நிதியுதவி கோரல் விண்ணப்பங்கள் மற்றும் சமர்ப்பிப்புகள் தங்கள் வர்த்தக மாதிரியை விவரிக்க அழைக்கப்படும். இந்தத் துறைக்கான இந்தியாவின் முதல் மாநாடு இதுவாகும். ஒரு சிறந்த குழுவின் மதிப்பீடு மற்றும் ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா மற்றும் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஆகியவற்றின் இறுதி மதிப்பீட்டிற்குப் பிறகு, பட்டியலிடப்பட்ட ஸ்டார்ட்-அப்களுக்கான நிதி ஆதரவுத் தொகை இறுதி செய்யப்படும்.
ஐஐடி-மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையின் சங்கர் ராமன் இது பற்றிக் கூறும்போது,
"தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், அவர்களை உலக அளவில் போட்டித்தன்மையடையச் செய்யவும் ஊக்குவிப்பதில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்," என்றார்.
மே 2024 வரை, ஐஐடி-மெட்ராஸ் இன்குபேஷன் செல் 351 ஸ்டார்ட்-அப்களை நிதியாதரவு அளித்து பாதுகாத்துள்ளது. அவை மொத்தம் ரூ.10,425 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன. மேலும், இவை ரூ.45,000 கோடி மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. ஸ்டார்ட்-அப்கள் 2022-23 நிதியாண்டில் ரூ.3,600 கோடி வருவாயை ஈட்டியுள்ளன. மேலும், 210-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை தாக்கல் செய்ததோடு 10,000 பேருக்கும் மேல் வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளது.

