சீனாவை முந்தியது - ‘இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை’ கொண்ட நாடாக ஐநா அறிவிப்பு!
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா:
சீனாவை விட 2.9 மில்லியன் மக்களுடன், இந்தியா ’உலகின் அதிக மக்கள் தொகை’ கொண்ட நாடாக மாறியுள்ளது. ஐநா வெளியிட்டுள்ள உலக மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,
இந்தியா 142.88 கோடி மக்கள் தொகையை எட்டியது. அதே நேரத்தில் சீனா 142.57 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1960க்குப் பிறகு முதன்முறையாக, சீனாவின் மக்கள் தொகை கடந்த ஆண்டு குறைந்தது. இதனையடுத்து, 1980ம் ஆண்டு அதன் தலைநகரான பெய்ஜிங்கில் கொண்டு வரப்பட்ட மக்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கடுமையான சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை UNFPA ‘உலக மக்கள்தொகை அறிக்கை, 2023’ வெளியிட்டுள்ளது. அதன்படி. இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியை தண்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 18 சதவீதம் பேர் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள், 26 சதவீதம் பேர் 10 முதல் 24 வயது வரை உள்ளவர்கள், 68 15 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்களில் சதவீதம், 65 வயதுக்கு மேல் 7 சதவீதம் ஆகும்.
ஐநா அறிக்கையின்படி, ஆயுட்காலம் அடிப்படையில் இந்தியாவை விட சீனா சிறப்பாக உள்ளது என்றும், சீன பெண்களின் ஆயுட்காலம் 82 மற்றும் 76 ஆக உள்ளது. அதுவே இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் ஆயுட்காலம் 74 மற்றும் 71 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக மக்கள் தொகை:
ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் உலக மக்கள் தொகை 8.045 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வயதான நபர்கள் அதிகம் வசிக்கும் நாடு என்பதால், ஜப்பான் 2011 மற்றும் 2021க்கு இடையில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்களை இழந்துள்ளது.
ஐநாவின் கணிப்புப்படி, உலகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொடர்ந்து அதிகரித்து 10.4 பில்லியன்களை எட்டக்கூடும் என்றும், 2090ம் ஆண்டிற்கு பிறகு படிப்படியாக குறையக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

