Bodhan.Ai உருவாக்கிய ஆசிரியர்களுக்கான ஏஐ எழுத்தறிவு’த் திட்டம் அறிமுகம்!
இந்தியாவின் பள்ளிக் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக, போதன் ஏஐ நிறுவனம் ஆசிரியர்களுக்கான ஏஐ எழுத்தறிவு எனும் தேசிய அளவிலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் பள்ளிக் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக, போதன் ஏஐ (Bodhan.Ai) நிறுவனம் ஆசிரியர்களுக்கான ஏஐ எழுத்தறிவு எனும் தேசிய அளவிலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
2027-ம் ஆண்டுக்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அன்றாட கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்கான பயிற்சியளிப்பதை இத்திட்டம் இலக்காக கொண்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற, ஐஐடி மெட்ராஸ் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். போதன் ஏஐ என்பது, ஐஐடி மெட்ராஸில் உருவாக்கப்பட்ட கல்விக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டு மையமாகும்.

வகுப்பறைகளில் கற்பித்தல் வழங்கும் முறையை புதிதாக மறுசீரமைக்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவை துணைக் கருவியாக அல்லாமல், பாடத்திட்டத் திட்டமிடல், கற்றல் உள்ளடக்க உருவாக்கம், மதிப்பீடுகள், மாணவர் பின்னூட்ட அமைப்புகள் உள்ளிட்ட செயல்முறைகளோடு முக்கிய ஆசிரியர் உதவியாளராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘எதிர்காலத்துக்கு தயாரான இந்தியா’
“பார்வையிலிருந்து செயலாக்க நிலைக்கு நாம் செல்லக்கூடிய இந்நேரத்தில், ஆசிரியர்களுக்கான ஏஐ எழுத்தறிவுத் திட்டம் போன்ற முயற்சிகள், செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் தனித்துவமான முன்னேற்றப் பாதையை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. அனைவராலும் அணுகக்கூடிய தன்மை, ஒருங்கிணைந்த வடிவமைப்பு, தன்னிறைவுத் திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியே இந்தியாவின் இலக்காகும். அன்றாட வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதன் மூலம், நாம் வெறும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி எதிர்காலத்துக்கு தயாரான இந்தியாவை உருவாக்கும் வடிவமைப்பாளர்களாக ஆசிரியர்களையும் வலுப்படுத்துகிறோம்,” என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
“பரந்த அளவு மற்றும் பன்முகத்தன்மையில்தான் இந்தியாவின் பலம் அமைந்துள்ளது. இதன் சிக்கலான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொழில்நுட்பமும் வளர வேண்டும். செயற்கை நுண்ணறிவு கல்வித்துறையை மாற்றத் தொடங்கியுள்ள சூழலில், ஆசிரியர்களிடையே செயற்கை நுண்ணறிவு அறிவாற்றலை உருவாக்குவது அடிப்படைத் தேவையாகும். செயற்கை நுண்ணறிவை அன்றாட கற்பித்தல் நடைமுறைகளில் எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்பதை இம்முயற்சி எடுத்துக்காட்டுகிறது,” என்று ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறினார்.
கற்பித்தலில் முறைமையான மாற்றம்
“இந்தியாவின் ஒவ்வொரு ஆசிரியருக்கும் செயற்கை நுண்ணறிவை நம்பகமான உதவியாளராக மாற்றுவதே எங்கள் இலக்கு. இத்திட்டம் விழிப்புணர்வைத் தாண்டி, அன்றாட பயன்பாட்டை மையமாகக் கொண்டதாகும். இதன் மூலம் ஆசிரியர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக மாணவர்கள் ஈடுபாட்டுடன் கற்றலில் கூடுதல் கவனம் செலுத்தவும் உதவுகிறது,” என போதன் ஏஐ நிறுவன முதன்மை ஆய்வாளர் டாக்டர் மிதேஷ் காப்ரா குறிப்பிட்டார்.
இம்முயற்சி பின்வரும் பலன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:
- ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கும்
- கற்பித்தல் பொருட்களின் தரத்தையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும்
- மேலும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தரவுகளின் அடிப்படையிலான கற்றல் அனுபவங்களை வழங்க உதவும்
வழக்கமான கருவிகளின் பயன்பாடு இல்லாமல், ஏஐ ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பான கற்பித்தல் செயல்முறையை இத்திட்டம் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் மத்திய, மாநில மற்றும் அரசு ஆதரவு பள்ளிகளில் பரவலான அளவில் செயல்படுத்துதல் உறுதி செய்யப்படுகிறது.
Edited by Induja Raghunathan

