மின் விமான ஆம்புலன்ஸ் சேவை வழங்க அப்பல்லோ மருத்துவமனையுடன், இபிளேன் நிறுவனம் ஒப்பந்தம்!
நகர்புற பகுதிகளில் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் இபிளேன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
நகர்புற பகுதிகளில் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ‘இ-பிளேன்’ (eplane) நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. சென்னையில் கையெழுத்திடப்பட்டு, யுகேவின் பேம்பரோ சர்வதேச விமான கண்காட்சியில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ஒவ்வொரு 3.5 நிமிடங்களுக்கு ஒரு முறை எங்கேனும் ஒருவர் சாலை விபத்தில் இறப்பாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் 1,70,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் நிலை உள்ளது. சாலை விபத்துக்கு உள்ளாகிறவர்களில் 5ல் ஒருவர் மட்டுமே சிகிச்சைக்கு முக்கியமாக கருதப்படும் பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். நகர்புற நெரிசல் மற்றும் புவியியல் தொலைவு இதற்கான காரணங்களாக அமைகின்றன.

இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், இந்தியாவின் அவசர கால சிகிச்சை அமைப்பில், மின் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ ட்ரோன் டெலிவரி சேவைகளை கொண்டு வரும் வகையில், யூபிபை டெக்னாலஜிஸ் லிட் (தி இபிளேன் கம்பெனி) மற்றும் அப்பல்லோ மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
நெரிசல் மிக்க பகுதிகளில் தேவையான நேரத்தில் அவசர சிகிச்சையை அணுக இந்த வழி செய்யும். நகர்புற போக்குவரத்து தாமதத்தை தவிர்ப்பதோடு, ஹெலிகாப்டர் சேவையையும் செலவு குறைந்ததாக அமையும்.
விபத்தில் சிக்கியவர்கள், இதய நோயாளிகள் மற்றும் வாத பாதிப்பு கொண்டவர்கள் குறித்த நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது உயிர் காக்க உதவும். எனினும், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களினால் தற்போது தாமதம் உண்டாகிறது. இந்நிலையில், இந்த கூட்டு, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதில் ஏற்படும் தாமத்தை தவிர்க்க உதவும், என கருதப்படுகிறது.
இந்த கூட்டு சாத்தியமாக்கும் முக்கிய அம்சங்கள்:
மின் விமான ஆம்புலன்ஸ்கள்: இபிளேன் நிறுவனத்தின் இ200எக்ஸ் மின்வாகனம் அவசர கால சிகிச்சை, மருத்துவமனைகளுக்கு இடையிலான பயணம், உடல் உறுப்பு கொண்டு செல்வது ஆகியவற்றை சாலை போக்குவரத்தை விட ஏழு மடங்கு வேகத்தில் செய்யக்கூடியது. அதே நேரத்தில், ஹெலிகாப்டர் செலவைவிட மிகவும் குறைந்தது.
மருத்துவ ட்ரோன்கள்: இபிளேன் நிறுவனம் தனது துணை நிறுவனம் ஆம்பர் விங்ஸ் மூலம் இரத்தம், தடுப்பூசிகள், உடல் உறுப்புகள் ஆகியவற்றை வேகமாக கொண்டு செல்வதற்கான ஆளில்லா விமான சேவையை வழங்கும்.
அப்பல்லோ மருத்துவமனையில் 1066 ஆம்புலன்ஸ்கள், கிளினிக், மருத்துவமனைகள், மருந்தங்கள் மற்றும் பரிசோதனை மையங்கள்.
இந்த கூட்டு முயற்சியின் அங்கமாக, அப்பல்லோ மருத்துவமனை இ200 எக்ஸ் மின் விமானம் மற்றும் ஆம்பர் ட்ரோன்களுக்கான ஆர்டர்களை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், இபிளேன் நிறுவனத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதிர்காலத்தில் வியூக நோக்கில் முதலீடு செய்ப்வதற்கான சாத்தியத்தையும் ஒப்பந்தம் கொண்டுள்ளது.
இந்த அம்சங்கள் தொடர்பாக இரு தரப்பு நிறுவனங்களும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட் உள்ளது.
"இந்தியாவின் தனியார் மருத்துவமனை முன்னோடியான அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் என்ற முறையில் மருத்துவ சிக்கல் நிபுணத்துவத்தோடு, அழமான அணுகல் வசதி மிகவும் முக்கியம் என கருதி வந்துள்ளேன். தொலைவான பகுதிகளிலும் இதை சாத்தியமாக்குவதில் மருத்துவமனைக்கு உள்ள ஈடுபாட்டை இந்த கூட்டு உணர்த்துகிறது,” என மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுவது எங்கள் மின் விமானம் மற்றும் டிரோன்கள் விபத்து சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் சேவை அளிக்க வழி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது, என்று இபிளேன் கம்பெனி நிறுவனர் மற்றும் சிடிஓ சத்யா சக்ர்வர்த்தி கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan

