Skyroot தயாரித்த இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட் விக்ரம்-1 இன்று விண்ணில் பாய்ந்தது!
"மிஷன் ஆகமன்" (’Mission Aagaman’- arriaval) என்று பெயரிடப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தின் ஏவுதல், நாட்டின் வணிக விண்வெளித் துறைக்கு ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது; இதனை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்பேஸ்-டெக் ஸ்டார்ட்-அப் Skyroot Aerospace செயல்படுத்தியுள்ளது.
பல தொழில்நுட்ப செயல்விளக்க பேலோடுகள் (Payloads) மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அஞ்சல் அட்டை ஆகியவற்றை ஏந்தியபடி, இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை-வகுப்பு ராக்கெட்டான 'விக்ரம்-1' (Vikram-1), ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
"மிஷன் ஆகமன்" (’Mission Aagaman’- arriaval) என்று பெயரிடப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தின் ஏவுதல், நாட்டின் வணிக விண்வெளித் துறைக்கு ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது; இதனை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்பேஸ்-டெக் ஸ்டார்ட்-அப் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) செயல்படுத்தியுள்ளது.
மேகமூட்டமான நாளான இன்று, ஏழு அடுக்கு மாடி உயரமும், நான்கு நிலைகளும் கொண்ட விக்ரம்-1 ராக்கெட், சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 12.05 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

வழிசெலுத்தல் (navigation) தொடர்பான சில சிக்கல்கள் காரணமாக ஏற்பட்ட ஒரு "திட்டமிடப்பட்ட நிறுத்தத்தை" (planned hold) தொடர்ந்து, ஏவுதல் நேரம் முதலில் நிர்ணயிக்கப்பட்ட முற்பகல் 11.30 மணியிலிருந்து 35 நிமிடங்கள் தாமதமாக மாற்றியமைக்கப்பட்டது.
தனது ஆரம்பக்கட்ட 16 நிமிடங்களுக்கும் குறைவான பயணத்திற்குப் பிறகு, விக்ரம்-1 உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பேலோடுகளை 60 டிகிரி சாய்வுடன் 450 கிமீ உயரத்தில் உள்ள புவியின் குறைந்த சுற்றுப்பாதையில் (LEO) நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் புகழ்பெற்ற விக்ரம் சாராபாயின் நினைவாக பெயரிடப்பட்ட விக்ரம்-1, முழு கார்பன் கலவை அமைப்பைக் (all-carbon composite structure) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இது 3D-அச்சிடப்பட்ட என்ஜின்கள் மற்றும் அதிக உந்துவிசை கொண்ட திட-எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் உள்ளிட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உந்துவிசை அமைப்புகளால் இயக்கப்படுகிறது.
இந்த ராக்கெட் ‘கிரஹா ஸ்பேஸ்’ (Grahaa Space), ’காஸ்மோசர்வ்’ (Cosmoserve), ’டி-கியூப்ட்’ (DCubed) மற்றும் ’ஸ்கைரூட்’டின் சொந்த ஸ்கோப் (SCOPE) ஆகியவற்றின் பேலோடுகளுடன், 'காஸ்மிக் புளூம்' (Cosmic Bloom) என்ற கலைப்படைப்பையும் ஏந்திச் செல்கிறது

2018 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட ஏரோஸ்பேஸ்-டெக் ஸ்டார்ட்-அப் ஸ்கைரூட் நிறுவனம். இது, இன்றைய ஏவுதலை அடுத்து, சுற்றுப்பாதையில் ராக்கெட்டை ஏவிய முதல் இந்திய தனியார் நிறுவனமாகியுள்ளது. இதன் மூலம் விண்வெளியில் சுற்றுப்பாதை ஏவுதல்களை மேற்கொள்ளும் திறன் கொண்ட தனியார் நிறுவனத்தைக் கொண்டுள்ள நாடுகளில், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது நாடாக உருவெடுத்துள்ளது.
வெற்றிகரமான இந்த விக்ரம்-1 ஏவுதல், ஸ்கைரூட் நிறுவனம் "விண்வெளிக்கான கேப் சேவை" (cab service to space) என்று அழைக்கும் அதன் இலக்கை நோக்கி பயணித்துள்ளதை காட்டுகிறது. இந்தச் சேவையின் கீழ், நிறுவனங்கள் ஒரு செயற்கைக்கோளை நிலைநிறுத்த அல்லது விண்வெளி நிலையத்திற்குச் செல்ல சுற்றுப்பாதையில் உள்ள ஒரு தனித்துவமான இடத்திற்குப் பயணம் செய்ய, ஒரு ராக்கெட்டை வாடகைக்கு எடுக்க முடியும்.

