இறைச்சி ரீடெயில் Fipola -வின் ப்ராண்ட் அம்பாசிடர் ஆனார் நயன்தாரா!
இறைச்சி மற்றும் கடல் உணவு வகைகளை தரமாகவும் ஃப்ரெஷ்ஷாவும் வழங்கும், தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரீடெயில் பிராண்ட் Fipola, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை அதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்திருக்கிறது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய இறைச்சி ரீடெயில் பிராண்ட்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை அதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்திருக்கிறது.தென்னிந்தியாவின் ஃப்ரெஷ் இறைச்சி விற்பனை ரீடெயில் பிராண்டை விளம்பரப்படுத்த தென்னிந்தியாவின் லேடி சூபார்ஸ்டார் நயன்தாரா பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை Fipola-வின் ப்ராண்ட் அம்பாசிடராக அறிவித்ததாக அந்நிறுவன நிறுவனர் மற்றும் சிஇஓ சுஷீல் கனுகோலு தெரிவித்துள்ளார்.
”இந்தியாவின் இறைச்சி மற்றும் கடல் உணவு பிரியர்களைக் கவர்ந்திழுக்கவும் அவர்களைச் சென்றடையவும் திறமைமிக்க மிகப்பெரிய ஆளுமையாக விளங்கும் நயன்தாராவை இணைத்துக்கொண்டிருக்கிறோம். சினிமா என்பது இந்தியாவின் இதயத்துடிப்பாக விளங்குகிறது. உணவுப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான திரை நட்சத்திரங்களுடன் எளிதில் இணைந்துவிடுவார்கள். இவர்களிடையே விளம்பரப்படுத்த நயன்தாராவைக் காட்டிலும் வேறு யார் பொருத்தமானவராக இருக்கமுடியும்?” என்றுகுறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த மாதம் வரை தென்னிந்தியா முழுவதும் சுமார் 100 ஸ்டோர்கள் திறக்கப்பட்டிருப்பதாக சுஷீல் தெரிவித்தார்.
Fipola அதன் புதிய பிரச்சாரங்களுக்காக நயன்தாராவை இணைத்துக்கொண்டுள்ளது. இது தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியா, சமூக வலைதளங்கள், அச்சு ஊடகம் போன்றவற்றில் ஒளிபரப்பப்படும்.
Fipola, ஃப்ரெஷ் இறைச்சி விற்பனைத் துறையில் ஒரு முக்கிய பிராண்டாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பிரபல திரை நட்சத்திரமான நயன்தாராவை பிராண்ட் அம்பாசிடராக இணைத்துக்கொள்வதாக கையொப்பமிட்டுள்ளது.
Fipola தரமான தயாரிப்புகளுடனும் புரொஃபஷனல் அணுகுமுறையுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட இறைச்சி ரீடெயில் துறையை வேறொரு தளத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. ஃப்ரெஷ்ஷான இறைச்சியையும் கடல் உணவுகளையும் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த பிராண்ட் தீவிர முனைப்பு காட்டுகிறது.
“இந்த பிராண்ட் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தென்னிந்தியர்களுக்கு மிகவும் நெருக்கமான பிராண்டாக மாறி வரும் Fipola உடன் இணைந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த பிராண்ட் உடன் ஏற்பட்டிருக்கும் இந்த இணைப்பு நீடித்திருக்க விரும்புகிறேன்,” என்று நயன்தாரா தெரிவித்திருக்கிறார்.