Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மோசடி பரிவர்த்தனைகள் செய்ய லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகள்: ஆர்பிஐ எச்சரிக்கை!

திரும்பி வசூலிக்கப்படாத பழைய கடன்களுக்காக புதிய கடன்களை அளிக்கும் நியாயமற்ற வங்கி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடி பரிவர்த்தனைகள் செய்ய லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகள்: ஆர்பிஐ எச்சரிக்கை!

Friday July 12, 2024 , 2 min Read

மோசடி பரிவர்த்தனைகளுக்காகவென்றே லட்சக்கணக்கில் வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருவதைக் குறித்து வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே போல், திரும்பி வசூலிக்கப்படாத பழைய கடன்களுக்காக புதிய கடன்களை அளிக்கும் நியாயமற்ற வங்கி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

RBI

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஜே.சுவாமிநாதன் இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவிக்கும் போது,

“எந்த ஒரு நியாயமான காரணமும் இன்றி சில வங்கிகளில் சில கணக்குகள் இயங்கி வருகின்றன. இந்த வங்கிக் கணக்குகளின் மூலம் சிலபல வர்த்தக மோசடி வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இதோடு கடன் கணக்குகளில் வராத கடனுக்காக புதிய கடனை அளிக்கும் நடைமுறையையும் பார்த்து வருகிறோம். வங்கிகளின் செயல்பாட்டுத் திறனுக்காக திறக்கப்படும் உள் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் அதிக இடர்பாடுடையது," என்றார்.

இது தொடர்பாக, தலைமை நிதி அதிகாரிகளை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், துல்லியமான மற்றும் நிகழ்நேர நிதி நுண்ணறிவுகளை வழங்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுகளில் முதலீடு செய்யுங்கள். இப்படிச் செய்வது சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் தீர்மானங்களுக்கு உதவும் என்பதோடு தணிக்கைகளின் போதும் மேற்பார்வையாளர்களின் மதிப்பீட்டு ஆய்வின் போதும் விரைவு கதியில் எழும் கேள்விகளுக்குத் தயாராக இருக்க முடியும்.

எனவே, CFO-க்கள் அவற்றை முழுமையாகப் பகுத்தறிவு செய்து, அத்தியாவசியமான குறைந்தபட்ச நிலைக்குக் கொண்டு வந்து, அவ்வப்போது சமரசம் செய்து, ஆடிட் கமிட்டியிடம் (ACB) முறையான புகாரளிப்பதன் மூலம் அதிகக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தலைமை நிதி அதிகாரிகள் அதாவது, சி.எஃப்.ஓ.க்கள் எம்.டி. மற்றும் தலைமைச் செயல் அதிகாரியிடம் வெளிப்படையாக விவரங்களைப் பகிர வேண்டும். சி.எஃப்.ஓ.க்கள் வங்கியின் சூப்பர்வைசர்கள் மற்றும் தணிக்கையாளர்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும். இவர்களிடம் சி.எஃப்.ஓ.க்கள் உண்மை நிலவரங்களை மறைப்பதோ, தவிர்ப்பதோ, தவறான தகவல்களை அளிப்பதோ கூடாது.

”ஒட்டுமொத்த துல்லிய தரவுகளை அளிப்பதில் வெளிப்படைத் தன்மை அவசியம். இதன் மூலம் தான் வங்கிகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற முடியும். பிரச்சனைகளுக்கு குறுகிய கால தீர்வுகளைக் காணாமல் பிரச்சனைகளின் கீழ் உள்ள உண்மையான காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து நீண்ட கால தீர்வுகளை எட்ட வேண்டும். இவற்றைச் செய்தால் சிக்கல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கலாம் மேலும் வங்கியின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டுச் சூழலை பலப்படுத்த முடியும்,” என்றார் ஜே.சுவாமிநாதன்.

தகவலுதவி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலம்