CRED-ல் மெட்டா ரூ.8,550 கோடி முதலீடு: வாட்ஸ் அப் சி.இ.ஒ ஆகிறார் நிறுவனர் குணால் ஷா!
புதிய நிதியை வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் பொது வெளியீட்டை நோக்கிய பாதையை வலுவாக்க நிறுவனம் பயன்படுத்த உள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த யூனிகார்ன் நிறுவனம் 'கிரெட்' (CRED) மெட்டா நிறுவனம் தலைமையிலான எச் சுற்றில் ரூ.8550 கோடி (900 மில்லியன் டாலர்), நிதி திரட்ட உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவனர் குணால் ஷா, சி.இ.ஒ. பதவியில் இருந்து உடனடியாக விலகி வாட்ஸ் அப் சி.இ.ஒ.வாக பொறுப்பேற்க உள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், இந்த அண்மை நிதிச் சுற்று முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பரிவர்த்தனைகளை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சுற்று, நிறுவனத்தின் முதலீட்டிற்கு பிந்தைய சந்தை மதிப்பீடாக ரூ.43,239 கோடியாக (4.5 பில்லியன் டாலர்) மதிப்பிட்டுள்ளது. முதலீட்டிற்கு முந்தைய சந்தை மதிப்பீடு ரூ.38,819 கோடி ஆகும் (4.03 பில்லியன் டாலர்).

மெட்டா நிறுவனம் சிறிய அளவு முதலீட்டாளராக இணையும் என்றும், வாடிக்கையாளர் தரவுகளுக்கான அணுகலை பெறாது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
”குணால் ஷா, வாட்ஸ் அப்'பின் அடுத்த தலைவராக மெட்டாவில் இணைகிறார். இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Cred-டை குணால் உருவாக்கியுள்ளார். உலகின் மிகப்பெரிய மெசேஜிங் செயலியை நிர்வகிக்க உதவும், உருவாக்குனர் மனநிலை மற்றும் சர்வதேச பார்வையை அவர் கொண்டுள்ளார்,” என மெட்டார் சி.இ.ஒ. மார்க் ஜக்கர்பர்க் இது தொடர்பான சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
குணால் ஷா நிறுவனத்தில் தனது தனிப்பட்ட பங்கு விகிதத்தை தொடர்வார் என்றும் கிரெட் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 2020 முதல் வியூகம் மற்றும் நிதி செயல்பாடுகளை கவனித்து வரும் மிடென் சம்பத், உடனடியாக தற்காலிக சி.இ.ஒ வாக பொறுப்பேற்பார் என்றும் தெரிவித்துள்ளது.
ஐபிஒவை எதிர்நோக்கி தயாராகி வரும் நிலையில், இயக்குனர் குழுமம் மற்றும் தலைமைக்குழு நீண்ட கால தலைமை அமைப்பை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
“கிரெடிட் தகுதி பரிசுக்குறியது எனும் நம்பிக்கையில் 2018ல் கிரெட் நிறுவனத்தை துவக்கினேன். எட்டு ஆண்டுகளுக்குள் இந்த நம்பிக்கை புதிய வர்த்தக பிரிவாக உருவாகியுள்ளது: லட்சக்கணக்கான உறுப்பினர்கள், ரூ.3,200 கோடி வருவாய் (325 மில்லியன் டாலர்), லாபமீட்டல், உரிமங்கள் தொகுப்பு மற்றும் வலுவான பிராண்ட் உள்ளன,” என்று நிறுவனர் குணால் ஷா கூறியுள்ளார்.
இந்த நிதி, வளர்ச்சியை வேகமாக்கி, நிறுவன ஆற்றலை மேம்படுத்த மற்றும் பல பிரிவுகளில் முன்னிலையை விரிவாக்க உதவும், என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிதிநுட்ப நிறுவனம் பேமெண்ட், கடன், காப்பீடு, வளம் நிர்வாகம், வாழ்வியல் சேவைகளில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. 17 மில்லியனுக்கும் மேல் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளது.
இந்தியாவின் கிரெடிட் கார்ட் பில் செலுத்துதலில் 40 சதவீதத்திற்கு மேல் செயல்படுவதுவதாக கிரெட் தெரிவித்துள்ளது. இதன் கடன் வழங்கல் சேவை ரூ.24,000 கோடியாக வளர்ந்துள்ளது.
“1.7 கோடி கடன் தகுதி மிக்க இந்தியர்கள் பணத்துடனான தங்களை உறவை மேம்படுத்திக் கொள்ள கிரெட்டை நம்புகின்றனர். இதன் பின்னே தலைமை, நோக்கம், மற்றும் தரத்தை சீராக வெளிப்படுத்திய குழு இருக்கிறது. குணால் கனவின் மீது வளர்ச்சி பெறுவதற்கான மற்றும் பொது நிறுவனமாக உருவாகும் ஒரு தலைமுறை வாய்ப்பு உள்ளது,” என தற்காலிக CRED-இன் சி.இ.ஒ. மிதேன் சம்பத் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan

