ரூ.10,000 வரை பரிவர்த்தனை செய்ய ப்ரீபெய்டு கார்டு: ரிசர்வ வங்கி யோசனை!
பத்தாயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மற்றும் பில் செலுத்துவதற்கான ப்ரீபெய்டு கார்டை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
பத்தாயிரம் ரூபாய் வரையான பொருட்கள், சேவைகள் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தக் கூடிய ப்ரீபெய்டு கார்ட் பேமெண்ட் (பிபிஐ) அறிமுகம் செய்ய உத்தேசித்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் ப்ரீபெய்டு பேமெண்ட் சாதனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், புதிய சாதனம் இந்த வசதியை மேலும் மேம்படுத்தும் என்றும் ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
”ப்ரீபெய்டு பேமெண்ட் பணம் செலுத்தலை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ரூ.10,000 வரையான பொருட்கள், சேவைகளை வாங்குவதற்கு பயன்படுத்தக்கூடிய புதிய பிபிஐ அறிமுகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார்டுகள் வங்கிக் கணக்கு முலம் மட்டுமே ரீலோடு செய்யப்பட முடியும் என்றும், பில் செலுத்த மற்றும் வர்த்தகர்களுக்கு பணம் செலுத்த இதை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து குறைந்த பட்ச தகவல்களைப் பெற்றுக்கொண்டு இந்த கார்டுகளை வழங்கலாம். இது தொடர்பான நெறிமுறைகள் டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிஐ, பொருட்கள் மற்றும் சேவைகள் பரிவர்த்தனைக்கு உதவுவதோடு, நிதிச்சேவைகள் பெற மற்றும் பணம் அனுப்பி வைக்கவும் வழி செய்கிறது. இவற்றை ரொக்கம் மூலம், வங்கிக் கணக்கு மூலம், கிரெடிட் கார்டு அல்லது பிற பிபிஐ கார்டு மூலம் பணத்தை நிரப்பலாம். மாதம் 50,000 வரை இதில் பணம் நிரப்பலாம். தற்போதைய நிலையில் வங்கிகள் மற்றும் வங்கி சாராத அமைப்புகள் இவற்றை வெளியிடுகின்றன.
குலோஸ்டு சிஸ்டம் பிபிஐ, செமி குலோஸ்டு பிபிஐ மற்றும் ஓபன் பிபிஐ என மூன்று விதமான பிபிஐ உள்ளன.
மாற்றம்
சர்வதேச நிதிச்சேவை மைய வங்கிகள் மையங்கள் (ஐபியூ) தங்களது வர்த்தக வாடிக்கையாளர்களுக்காக அந்நியச் செலாவனி நடப்பு கணக்கு துவக்க அனுமதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
லிக்விடிட்டி கவரேஜ் விகிதத்தை பொருத்தவரை, வங்கி சாரா அமைப்புகளிடம் இருந்து ஓராண்டுக்கு குறைவான வெளிநாட்டு பண டெபாசிட்டை ஏற்றுக்கொள்ளவும் ஐபியூக்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தற்போதுள்ள முன்கூட்டிய டெபாசிட்களை விலக்கிக் கொள்வதற்கான வரம்புகளையும் நீக்கியுள்ளது.
“எனினும், அதிக நிகர மதிப்பு கொண்டவர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து ரீடைல் டெபாசிட் பெறுவது தொடர்பான கட்டுப்பாடு தொடர்வதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செய்தி : பிடிஐ
தமிழில் : சைபர்சிம்மன்