மின் பைக் கடன் வசதி பெற ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியுடன் Raptee.HV நிறுவனம் கூட்டு!
சென்னையைச் சேர்ந்த மின்சார பைக் தயாரிப்பு நிறுவனமான ரேப்டீ.எச்வி இந்தியாவின் மிகப்பெரிய மின்வாகன கடன் சேவைக்காக, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியுடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மின்சார பைக் தயாரிப்பு நிறுவனமான ரேப்டீ.எச்வி இந்தியாவின் மிகப்பெரிய மின்வாகன கடன் சேவைக்காக, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இந்த கூட்டுறவு, இந்தியாவில் மின் பைக் ஏற்பிற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் நிதி வசதியை எதிர்கொள்ள உதவும். இது வாடிக்கையாளர்களுக்கு வேகமான அனுமதி மற்றும் ஏற்ற முறையில் திரும்பி செலுத்தும் வசதி கொண்ட கடன் வாய்ப்புகளை வழங்கும்.
இரு சக்கர வாகனங்களில் மின்சார் கார்களின் அதிக வோல்டேஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முன்னோடி நிறுவனமாக Raptee.hv விளங்குகிறது.

“பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு பைக் வாங்குவதை விட, அதை வாங்குவது எத்தனை வசதியான அனுபவமாக இருக்கிறது என்பது முக்கியம். இந்த பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள சிக்கலை நீக்குவதில் நாங்கள் கவனமாக இருந்து வருகிறோம். சார்ஜிங், சேவை மற்றும் காப்பீடு, கடன் வசதி என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம். எங்கள் ஒப்பந்தம் மூலம், வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் வசதி பெறலாம் என நிறுவன இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ தினேஷ் அர்ஜுன் கூறினார்.
இந்த கூட்டுறவு இந்தியா முழுவதும் மின்சார் பைக் ஏற்கச் செய்வதை வேகமாக்குவதில் மற்றொரு முக்கிய முன்னேற்றம் என்றும் கூறினார்.
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி தவிர நிறுவனம் ஏற்கனவே ஐஓபி மற்றும் ஸ்ரீராம் பைனான்ஸ் ஆகியவற்றுடன் கூட்டு வைத்துள்ளது. காப்பீடு வசதிக்காகவும் இதே போன்ற கூட்டு ஏற்படுத்தியுள்ளது.
Edited by Induja Raghunathan

