Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு

Friday June 07, 2019 , 1 min Read

தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் (பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள்) சட்ட மசோதா இறுதி செய்யப்பட்டது.  

1
அதன்படி, அனைத்து ஓட்டல்கள், கடைகள், சினிமா தியேட்டர்கள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மசோதாவை ஒவ்வொரு மாநிலமும் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலத்தின் நடைமுறை தேவைகளின்படி மாற்றிக்கொண்டு அமல்படுத்தலாம் என்று வழிவகை செய்யப்பட்டது. 

இந்தியாவில் அந்த மசோதாவை அமல்படுத்திய மாநிலம் மராட்டிய மாநிலமாகும். 2018-ம் ஆண்டு முதல் அங்கு கடைகள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் 2017-ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதிவரை ஓராண்டுக்கு கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து, அரசுக்கு தொழிலாளர் ஆணையர் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பெண் பணியாளர் பாதுகாப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான அனுமதியை அரசு வழங்கலாம் என்று அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார். கடிதத்தை ஏற்ற அரசு அதற்கான வரைவு அறிவிப்பாணை வெளியிட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இது என தெரிவித்துள்ளது.

பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அரசாணை வெளிடப்பட்டது. இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.