சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் மேல் சரிவு - இன்று பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு 3 முக்கியக் காரணங்கள்!
பங்குச்சந்தை சரிவு பரவலாக காணப்பட்டது. பெரும்பாலான முக்கிய துறை குறியீடுகள் சிவப்பு நிறத்தில் வர்த்தகமானன. நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1.10% சரிந்தது.
புதன்கிழமை காலை வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை குறியீடுகளில் கடும் விற்பனை நிலவியது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 600 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 24,050 புள்ளிகளுக்குக் கீழ் சென்றது. மருந்து மற்றும் வங்கிப் பங்குகளில் ஏற்பட்ட சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பல்வேறு துறைகளில் பரவலான விற்பனை ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்தன.
காலை 11.35 மணியளவில், பிஎஸ்இ சென்செக்ஸ் 565 புள்ளிகள் அல்லது 0.73% சரிந்து 76905.10 புள்ளிகளில் வர்த்தகமானது. அதே நேரத்தில், என்எஸ்இ, நிஃப்டி50 குறியீடு 149 புள்ளிகள் அல்லது 0.62% சரிந்து 24,038.70 புள்ளிகளாக இருந்தது.
பங்குச்சந்தை சரிவு பரவலாக காணப்பட்டது. பெரும்பாலான முக்கிய துறை குறியீடுகள் சிவப்பு நிறத்தில் வர்த்தகமானன. நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1.10% சரிந்தது. நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி மிட்கேப் 50 குறியீடுகள் முறையே 0.70% மற்றும் 0.74% வீழ்ச்சியடைந்தன. சந்தையின் ஏற்ற இறக்கத்தை அளவிடும் இந்தியா VIX குறியீடு 2.79% உயர்ந்தது.
இன்றைய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள்:
1. அமெரிக்க வரி அச்சத்தால் மருந்துப் பங்குகள் சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு கட்டம் கட்டமாக வரி விதிக்கும் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, மருந்து நிறுவனங்களின் பங்குகளில் கடும் விற்பனை ஏற்பட்டது. புதிய வரிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிஃப்டி பார்மா குறியீடு 1.70% சரிந்தது. ஆரம்ப வர்த்தகத்தில் மோசமாக செயல்பட்ட துறையாக மருந்துத்துறை இருந்தது.
மருந்துத்துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பங்குகளிலும் விற்பனை அதிகரித்தது. கிளாண்ட் பார்மா 3.57% சரிந்தது. பிபிஎல் பார்மா 3.28%, ஆல்கெம் லேபரட்டரீஸ் 2.97%, லூபின் 2.92%, அஜந்தா பார்மா 2.88% மற்றும் அரவிந்தோ பார்மா 2.79% சரிவைச் சந்தித்தன.
2.பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 92 டாலரைத் தாண்டியது:
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்ததும் முதலீட்டாளர்களுக்கு மற்றொரு முக்கிய கவலையாக அமைந்தது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.16% உயர்ந்து ஒரு பேரலுக்கு 92.07 டாலராக அதிகரித்தது. இது ஜூன் மாதத்துக்குப் பிறகு பதிவான அதிகபட்ச அளவாகும். அதேபோல், WTI கச்சா எண்ணெய் விலை 1.03% உயர்ந்து 85.21 டாலராக இருந்தது.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிர்மறையானதாகக் கருதப்படுகிறது. எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் இறக்குமதி செலவு அதிகரிக்கும். மேலும், பணவீக்கம் உயர்வதுடன், நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு செலவுகளும் அதிகரிக்கக்கூடும்.
3. பல்வேறு துறைகளில் பங்குகள் பரவலாக விற்பனை செய்யப்பட்டதால் சரிவு:
பங்குச்சந்தை சரிவு ஒன்று அல்லது இரண்டு துறைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்படவில்லை. 16 முக்கிய துறை குறியீடுகளில் 10 குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமானன.
வங்கிப் பங்குகளிலும் அழுத்தம் நீடித்தது. நிஃப்டி பிஎஸ்யூ வங்கி குறியீடு 1.38% சரிந்தது. நிஃப்டி பிரைவேட் வங்கி குறியீடு 1.09% வீழ்ச்சியடைந்தது. நிஃப்டி ஃபைனான்ஷியல் சர்வீசஸ் குறியீடு 0.97% குறைந்தது.
முன்னணி பங்குகளில் எஸ்பிஐ 1.46% சரிந்தது. ஆக்சிஸ் வங்கி 1.34%, ஐசிஐசிஐ வங்கி 1.28%, ஹெச்டிஎஃப்சி வங்கி 0.99% மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி 0.78% சரிவைச் சந்தித்தன.
தொழில்நுட்பத் துறை பங்குகளிலும் விற்பனை காணப்பட்டது. நிஃப்டி ஐடி குறியீடு 0.73% சரிந்தது. டெக் மகிந்திரா 1.15%, இன்ஃபோசிஸ் 0.91% மற்றும் டிசிஎஸ் 0.39% சரிந்தன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 0.71% சரிந்தது. அதானி போர்ட்ஸ், சிமெண்ட், சன் பார்மா மற்றும் டிரெண்ட் உள்ளிட்ட பிற முக்கிய பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
ஏற்றம் கண்ட பங்குகள்
கல்யாண் ஜுவெல்லர்ஸ்
பஜாஜ் ஆட்டோ
டிவிஎஸ் மோட்டார்
நெஸ்லே
பி.ஐ. இண்டஸ்ட்ரீஸ்
இறக்கம் கண்ட பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அதானி போர்ட்ஸ்
சன் பார்மா
டெக் மகிந்திரா
இன்ஃபோசிஸ் 0.91%
டிசிஎஸ்
ரூபாய் மதிப்பு:
இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.96.46 ஆக உள்ளது.
