Stock News: இந்திய பங்குச் சந்தையில் மீட்சி - மவுசு கூடும் பங்குகள் எவை?
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் மீட்சிப் போக்கு நிலவியது. பெரும்பாலான நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்கின் எதிரொலியால், இந்திய பங்குச் சந்தைகளில் மீட்சிப் போக்கு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (நவ.6) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 376.89 புள்ளிகள் உயர்ந்து 83,836.04 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 81.5 புள்ளிகள் உயர்ந்து 25,679.15 ஆகவும் இருந்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் மீட்சிப் போக்கு நிலவியது. பெரும்பாலான நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்சிஸ் பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன. அதேவேளையில் எல் அண்ட் டி, பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 127.56 புள்ளிகள் உயர்ந்து 83,586.71 ஆகவும், நிஃப்டி 4.70 புள்ளிகள் சரிந்து 25,592.95 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தென் கொரியா, ஜப்பான், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் என அனைத்திலும் ஏற்றம் நிலவுகிறது. ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவும் சாதகமான போக்குடன் வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து சற்றே கூடியதால் இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி நிலவுகிறது.

ஏற்றம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
எம் அண்ட் எம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டிசிஎஸ்
நெஸ்லே இந்தியா
டெக் மஹிந்திரா
ஏசியன் பெயின்ட்ஸ்
டாடா மோட்டாரஸ்
இன்போசிஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
எஸ்பிஐ
மாருதி சுசுகி
சன் பார்மா
ஐடிசி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
பஜாஜ் ஃபின்சர்வ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இண்டஸ்இண்ட் பேங்க்
எல் அண்ட் டி
பாரதி ஏர்டெல்
டைடன் கம்பெனி
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா ஸ்டீல்
ஐசிஐசிஐ பேங்க்
என்டிபிசி
எடர்னல் லிட்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.51 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

