Stock News: மீண்டும் ஈரான் போர் தாக்கம்: பங்குச் சந்தையில் ரெட் அலர்ட்!
ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் வலுத்துள்ளதன் தாக்கத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இன்றைய முற்பகல் வர்த்தகத்திலும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 121.48 புள்ளிகள் சரிந்து 76,835.79 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 52.6 புள்ளிகள் சரிந்து 24,027.80 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் வலுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி நீடிக்கிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் ஐடிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. எஸ்பிஐ, ஆக்சிஸ் பேங்க், ஹெசிடிஎஃப்சி பேங்க், எடர்னல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 10 மணியளவில் சென்செக்ஸ் 135.63 புள்ளிகள் சரிந்து 76,821.64 ஆகவும், நிஃப்டி 54.50 புள்ளிகள் சரிந்து 24,025.90 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகப் போக்கு நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் வலுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி நீடிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
ஐடிசி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பாரதி ஏர்டெல்
இன்போசிஸ்
அதானி போர்ட்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டெக் மஹிந்திரா
எம் அண்ட் எம்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
ஹெசிடிஎஃப்சி பேங்க்
எடர்னல்
சன் பார்மா
டைடன் கம்பெனி
இண்டஸ்இண்ட் பேங்க்
டிசிஎஸ்
எல் அண்ட் டி
இந்துஸ்தான் யூனிலீவர்
மாருதி சுசுகி
டைடன் கம்பெனி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
பாஜாஜ் ஃபின்சர்வ்
டாடா ஸ்டீல்
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.45 ஆக இருந்தது.

