Stock News: சென்செக்ஸ் 400+ புள்ளிகள் சரிவு - இறங்கு முகம் காணும் பங்குகள் எவை?
வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து திடீரென குறைந்ததால் இந்திய பங்குச் சந்தையில் சரிவுப் போக்கு நிலவுகிறது. பெரும்பலானான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
சர்வதேச பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு நிலவினாலும் கூட, இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சியே காணப்படுகிறது. சென்செக்ஸ் 400+ புள்ளிகள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (அக்.30) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 297.96 புள்ளிகள் சரிந்து 84,699.17 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 90.05 புள்ளிகள் சரிந்து 25,963.85 ஆகவும் இருந்தது.
வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து திடீரென குறைந்ததால் இந்திய பங்குச் சந்தையில் சரிவுப் போக்கு நிலவுகிறது. பெரும்பலானான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன. எனினும் எல் அண்ட் டி, மாருதி சுசுகி, அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், நெஸ்லே இந்தியா, டைடன் கம்பெனி, அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ ஆகிய நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 412.59 புள்ளிகள் சரிந்து 84,584.54 ஆகவும், நிஃப்டி 130.30 புள்ளிகள் சரிந்து 25,923.60 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை கலவையான போக்குடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங், ஷாங்காய் என அனைத்திலும் ற்றமும் நிலவுகிறது. ஆனால், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைந்ததால் இந்திய பங்குச் சந்தையில் சரிவு நிலவுகிறது.

ஏற்றம் காணும் பங்குகள்:
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
டைடன் கம்பெனி
அதானி போர்ட்ஸ்
எஸ்பிஐ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
டிசிஎஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
ஏசியன் பெயின்ட்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
சன் பார்மா
இன்போசிஸ்
டாடா ஸ்டீல்
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா மோட்டார்ஸ்
பாரதி ஏர்டெல்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐடிசி
இந்துஸ்தான் யூனிலீவர்
ஆக்சிஸ் பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
எம் அண்ட் எம்
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
எடர்னல் லிட்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.49 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

