Stock News: சென்செக்ஸ் 600+ புள்ளிகள் சரிவு - பங்குச் சந்தையில் தொடரும் பேரிழப்பு!
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு, சர்வதேச பங்குச் சந்தைகளின் பாதகமான நிலை காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நீடிக்கிறது.
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு உள்ளிட்ட காரணங்களின் தாக்கத்தால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி இன்று தொடர்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன. இதனால், ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.9.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.20) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 385.82 புள்ளிகள் சரிந்து 81,794.65 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 91.5 புள்ளிகள் சரிந்து 25,141 ஆக இருந்தது.
“கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு, சர்வதேச பங்குச் சந்தைகளின் பாதகமான நிலை காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நீடிக்கிறது,” என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், எடர்னல், சன் பார்மா, டிசிஎஸ், பாரதி ஏர்டெல், டைடன் கம்பெனி உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 627.41 புள்ளிகள் சரிந்து 81,553.06 ஆகவும், நிஃப்டி 187.05 புள்ளிகள் சரிந்து 25,045.45 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங், ஷாங்காய் என அனைத்திலும் வீழ்ச்சியே நிலவுகிறது. கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு, சர்வதேச பங்குச் சந்தைகளின் பாதகமான நிலை, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவு, உள்ளூர் முதலீட்டாளர்களி்ன் அச்சம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நீடிக்கிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
எடர்னல் லிட்
இந்துஸ்தான் யூனிலீவர்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
சன் பார்மா
டிசிஎஸ்
பாரதி ஏர்டெல்
டைடன் கம்பெனி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
கொடக் மஹிந்திரா பேங்க்
எஸ்பிஐ
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அதானி போர்ட்ஸ்
டெக் மஹிந்திரா
பஜாஜ் ஃபைனான்ஸ்
மாருதி சுசுகி
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டாடா ஸ்டீல்
ஐடிசி
ஆக்சிஸ் பேங்க்
நெஸ்லே இந்தியா
இண்டஸ்இண்ட் பேங்க்
இன்போசிஸ்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.91.45 ஆக இருந்தது."
Edited by Induja Raghunathan

