Stock News: பங்குச் சந்தையில் பச்சை விளக்கு - சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!
கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சர்வதேச அரசியல் பதற்றங்கள் தணிந்து, பங்குச் சந்தை வர்த்தகம் மீளத் தொடங்கியுள்ளது.
உள்ளூர் முதலீட்டாளர்கள் மத்தியில் பிறந்துள்ள புதிய நம்பிக்கை உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையில் பச்சை விளக்கு எரிய ஆரம்பித்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் மீளத் தொடங்கின.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.22) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 774.04 புள்ளிகள் உயர்ந்து 82,683.67 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 233.85 புள்ளிகள் சரிந்து 25,391.35 ஆக இருந்தது.
“கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சர்வதேச அரசியல் பதற்றங்கள் தணிந்து, பங்குச் சந்தை வர்த்தகம் மீளத் தொடங்கியுள்ளது,” என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசுகி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எடர்னல் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
இன்று பிற்பகல் 12.40 மணியளவில் சென்செக்ஸ் 245.84 புள்ளிகள் உயர்ந்து 82,155.48 ஆகவும், நிஃப்டி 84.55 புள்ளிகள் உயர்ந்து 25,242.05 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் தென்கொரியா, மற்றும் ஜப்பானில் ஏற்றமும், ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் சரிவும் நிலவுகிறது. கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சர்வதேச அரசியல் பதற்றங்கள் தணிந்து, பங்குச் சந்தை வர்த்தகம் மீளத் தொடங்கியுள்ளது.
ஏற்றம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
அதானி போர்ட்ஸ்
என்டிபிசி
கொடக் மஹிந்திரா பேங்க்
டெக் மஹிந்திரா
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டாடா ஸ்டீல்
ஐடிசி
ஆக்சிஸ் பேங்க்
நெஸ்லே இந்தியா
இண்டஸ்இண்ட் பேங்க்
இன்போசிஸ்
எல் அண்ட் டி
டாடா மோட்டார்ஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
சன் பார்மா
டிசிஎஸ்
பாரதி ஏர்டெல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எம் அண்ட் எம்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
எடர்னல்
டைடன் கம்பெனி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.91.57 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

