கோவையில் 'உலகப் புத்தொழில் மாநாடு 2025' - புத்தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர்!
தமிழ்நாட்டை உலகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற முக்கியத்துவமிக்க மையமாக மாற்றும் நோக்குடன், 'உலக புத்தொழில் மாநாடு’ அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் துவக்கி வைக்கவுள்ள இம்மாநாட்டில் கலந்துகொள்ள தொழில்முனைவோர்களுக்கு அழைப்பு விடுத்தார் அமைச்சர்.
தமிழ்நாட்டை உலக தரத்தில் உள்ள புத்தொழில் மையமாக உருவாக்கும் நோக்குடன் 'உலக புத்தொழில் மாநாடு' (TNGSS 2025) – கோயம்புத்தூரில் நடைபெறுகிறது
தமிழ்நாட்டை உலகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற முக்கியத்துவமிக்க மையமாக மாற்றும் நோக்குடன், உலக புத்தொழில் மாநாடு (Global Startup Summit) அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு தொடர்பாக தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னையில் இன்று நந்தனம் அருகேயுள்ள ஸ்டார்ட்-அப் டிஎன் சார்பில் கோயம்புத்தூரில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறும் உலகப் புத்தொழில் மாநாடு 2025 தொடர்பாக புத்தொழில் முனைவோர், தொழில் முனைவோர் மற்றும் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் நடைபெற்றக் கூட்டத்தில் உரையாற்றினார்.
உலக புத்தொழில் மாநாடு (Global Startup Summit) அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டுக்கான லோகோ மற்றும் இணையதளத்தை துணை முதல்வர் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் 39 நாடுகளிலிருந்து 264 பங்கேற்பாளர்கள் மற்றும் 30,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஒன்றிய அரசுத் துறைகள், மாநில அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் இதில் கலந்துகொண்டு, 1000 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் மற்றும் 315 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
திமுக அரசு பதவியேற்ற பின்னர், ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வர் நேரடியாக Start-up TN அமைப்பை உருவாக்கி, 70க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் தலைமை செயல் அலுவலரை நியமித்து வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார்.
TANSEED திட்டம் மூலம் 212 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ரூ.79.49 கோடி முதலீடு செய்யப்பட்டு, அவை ரூ.554.49 கோடி அளவிலான வெளி முதலீடுகளை ஈர்த்துள்ளன. இதில் SC/ST சமூகத்தினரைச் சேர்ந்த 43 நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் 1000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
TANFUND தளம் வழியாக ரூ.128.84 கோடி தனியார் முதலீடு பெறப்பட்டுள்ளது. Start-up TN மூலம் டிசைன் ஸ்டூடியோ, Mentor TN, Launch Pad நிகழ்வுகள், Periyar Social Justice Industrial Hub, SpaceTech நிதியுதவி திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2021ல் 2032 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்பொழுது 12,171 புத்தாக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 6063 நிறுவனங்களில் பெண்கள் நிறுவனர்களாக உள்ளனர். தமிழ்நாடு தற்போது தேசிய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ள சிறந்த ஸ்டார்ட்-அப் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் 17 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 14 மாவட்டங்களில் கூடுதல் 16 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த நான்கரை ஆண்டுகளில், MSME துறை மூலம் ரூ.2,133.26 கோடி மானியத்துடன் ரூ.5,490.80 கோடி வங்கிக் கடன் உதவியாக வழங்கப்பட்டு, 66,018 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
இந்த உலக புத்தொழில் மாநாடு, தமிழ்நாட்டை உலகின் சிறந்த புத்தொழில் சூழல் கொண்ட 20 மாநிலங்களில் ஒன்றாக மாற்றும் முதல்வரின் இலக்கை நிறைவேற்றும் முக்கியமான படியாக அமைய உள்ளது.
முதல் 20 இடங்களில் தமிழ்நாட்டினை கொண்டு வர வேண்டும் என்ற இலக்கோடு இந்த புத்தொழில் மாநாடு நடத்தப்படுகிறது. அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பையும் கோரினார் அமைச்சர்.
‘தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு 2025’ - தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் புதுமையாக்கம்!
