ரூ.15,037 கோடி முதலீட்டில் நெல்லை சிப்காட்டில் மின்கல ஆலை அமைக்க 'விக்ரம் சோலார்' நிறுவனம் ஒப்பந்தம்!
திருநெல்வேலி மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில், 2670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின் ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில், 2670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 'விக்ரம் சோலார்' நிறுவனத்தின் மின் ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
விக்ரம் சோலார் நிறுவனம் தமிழ்நாட்டில் வல்லம், ஒரகடம் ஆகிய இடங்களில் சோலார் பிவி தொகுதி உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் சோலார் செல்கள் மற்றும் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையையும் நிறுவியுள்ளது.

இந்நிலையில், சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில், 2670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமை செயலாளர் சாய்குமார், தொழில் துறை கூடுதல் செயலர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தீபக் ஜேக்கப், விக்ரம் சோலார் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஞானேஷ் செளத்ரி, தலைமை செயல் அலுவலர் அருண் மிட்டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Edited by Induja Raghunathan

