திருச்சி அரசுப் பள்ளி மாணவன் அசத்தல் - ஐஐடி மெட்ராஸில் சேர உதவிய என்ஐடி இலவச பயிற்சி மையம்!
திருச்சி துறையூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனான முகில்ராஜ், கடினஉழைப்புடன் முயற்சித்து ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐஐடி மெட்ராஸில் படிக்க தகுதி பெற்றுள்ளார். இவர் ஐஐடி-க்கு தகுதி பெற, NIT மாணவர்களால் நடத்தப்படும் இலவச கற்பித்தல் சங்கமான IGNITTE பயிற்சி மையம் உதவியுள்ளது.
திருச்சி துறையூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவனான முகில்ராஜ், கடினஉழைப்புடன் முயற்சித்து ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐஐடி மெட்ராஸில் படிக்க தகுதி பெற்று, ஐஐடியன் என்ற பெருமையுடன், அரசு பள்ளி மாணவர்களுக்கான உத்வேகமாகியுள்ளார்...
ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IIT) படிக்க சேர்க்கை பெறவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால், நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான IIT-களில் சேருவது அத்தனை எளிதல்ல. ஐஐடியில் சேர்க்கை பெறுவதற்கு ஜேஇஇ மெயின்ஸ் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் ஆகிய இரு நுழைவுத் தேர்வுகளிலிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

JEE முதன்மைத் தேர்வு என்பது தேர்வின் முதல் நிலையாகும். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் முதல் 2,50,000பேர் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்விற்கு தகுதி பெறுவர். அதனால், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதே ஒரு முக்கியமான அளவுகோலாகும். இரு தேர்விலும் தேர்ச்சி பெற்று கனவு கல்வி மையத்தை அடைவதற்கு, அளவு கடந்த கடின உழைப்பும், அர்ப்பணிப்போடு பயிலவும் வேண்டும்.
அதனை சாத்தியப்படுத்தி, இவ்வாண்டிற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ஐஐடிகளில் படிக்க தகுதி பெற்று, ஐஐடியன்ஸ் என்ற பெருமை பெற்றுள்ளனர் தமிழக மாணவர்கள். அவர்களில் ஒருவரான முகில்ராஜ், அரசுப் பள்ளி மாணவராவர்.
திருச்சி துறையூரில் உள்ள பச்சபெருமாள்பட்டி கிராமத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் ஆர்.முகில்ராஜ். 2024ம் ஆண்டு ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, 91.23 சதவீத மதிப்பெண்களுடன் என்ஐடி சில்சாரில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்-ல் சேர்க்கை பெற்றார். இந்நிலையிலே, IGNITTE வழிகாட்டுதலுடன், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எதிர்கொள்ள தயாராகியுள்ளார். JEE Advanced 2025 தேர்வில் 1,751 என்ற அகில இந்திய தரவரிசையுடன் தேர்ச்சி பெற்று IIT Madras இல் கடற்படை கட்டிடக்கலை மற்றும் பெருங்கடல் பொறியியல் (Naval Architecture and Ocean Engineering) படிப்பில் சேர சேர்க்கை பெற்றுள்ளார்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIT-T) மாணவர்களால் நடத்தப்படும் கற்பித்தல் சங்கமான IGNITTE ஆனது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் ஜேஇஇ தேர்வினை எதிர்கொள்ள, இலவச பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது. திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துடன், IGNITTE இணைந்து ஆண்டுதோறும் நடத்தப்படும் ஸ்கிரீனிங் தேர்வுகளில், 400க்கும் மேற்பட்ட 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் உள்ளிட்ட இரண்டு நாள் செயல்முறையின் முடிவில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 20 மாணவர்கள் மட்டுமே பயிற்சித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு போட்டி நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்புகளை பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. அவர்களது உதவியுடன், விடுமுறைத் தினங்களிலிலும், சிறப்பு வகுப்புகளில் உதவியுடன், முகில்ராஜ் இந்தாண்டுக்கான ஜேஜேஇ தேர்வினை எழுதியுள்ளார்.
இம்முறை, அவரது கடின முயற்சியின் பலனாய், ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 95.88 சதவீதத்தைப் பெற்று JEE அட்வான்ஸ்டுக்குத் தகுதி பெற்றார். மேலும், அகில இந்திய அளவில் 1751 மதிப்பெண் பெற்று, IIT மெட்ராஸில் கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல் பொறியியலில் இடம் பெற்று, அரசு பள்ளிமாணவர்களுக்கான உத்வேகமாக மாறியுள்ளார்.
'நான் முதல்வன்' திட்டம் மூலம் IIT-JEE தேர்வில் வென்று சாதனை படைத்துள்ள விருதுநகர் அரசுப்பள்ளி மாணவி!

