டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் மற்றும் இத்தாலி குழுமம் கைகோர்க்கும் கூட்டு நிறுவனம்!
சர்வதேச அளவில் முன்னணி சப்ளை செயின் சேவை வழங்கும் டிவிஎஸ் சப்ளை சொல்யூஷன்ஸ் நிறுவனம், இத்தாலியைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறை சப்ளை செயின் ஒருங்கிணைப்பு சேவை வழங்கும் ஏஎல்ஏ குழுமத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபட இருப்பதை அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் முன்னணி சப்ளை செயின் சேவை வழங்கும் டிவிஎஸ் சப்ளை சொல்யூஷன்ஸ் நிறுவனம், இத்தாலியைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறை சப்ளை செயின் ஒருங்கிணைப்பு சேவை வழங்கும் ஏஎல்ஏ குழுமத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபட இருப்பதை அறிவித்துள்ளது.
இந்தியாவின் வேகமாக வளரும் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு துறை வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு இந்த கூட்டு நிறுவனத்தில், டிவிஎஸ் எஸ்சிஎஸ் 51 சதவீத பங்குகளையும் இத்தாலி குழுமம் 49 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு நிறுவனம், இந்தியாவில் டிவிஎஸ் எஸ்சிஎஸ் நிறுவனத்திற்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்பாக அமையும், என எதிர்பார்க்கப்படுகிறது. 2031ல் நிறுவனம் மொத்தமாக ரூ.2,000 கோடி வருவாவை எதிர்நோக்குகிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், டிவிஎஸ் எஸ்சிஎஸ் மற்றும் ஏ.எல்.ஏ குழுமம் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு துறைகளில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஆர்வத்தை பெற்றது. இதன் காரணமாக இந்த கூட்டு முயற்சிக்கு செயல் வடிவம் கொடுக்கம் முயற்சி துரிதமாக நிகழ்ந்துள்ளது.
இந்த கூட்டு நிறுவனம் துவக்கத்தில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகளில் கவனம் செலுத்தும். அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வாய்ப்புகளையும் கூட்டாக ஆராயும்.
“இந்த கூட்டு நிறுவனம் அதிக வளர்ச்சி மற்றும் சர்வதேச முக்கியத்துவம் கொண்ட ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு சப்ளை செயினில் நுழைய வழி செய்கிறது. சர்வதேச ஏரோஸ்பேஸ் பரப்பில் இந்திய முக்கிய சக்தியாக உருவாக்கி வருகிறது,” என்று டிவிஎஸ் சப்ளை செயின் சொயூஷன்ஸ் செயல் தலைவர் ஆர்.தினேஷ் கூறியுள்ளார்.
“ALA குழுமம் துறை சார்ந்த அனுபவம், சர்வதேச வாடிக்கையாளர் உறவு மற்றும் பாதுகாப்பு சப்ளை செயின் பிரிவில் பிரத்யேக ஆற்றலை கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியா வேகமாக வளரும் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு சந்தையாக விளங்குகிறது. இந்தத் துறையில் நாங்கள் வலுவான வாடிக்கையாளர் உறவு கொண்டுள்ளோம். பல சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் இருப்பை உண்டாக்க பரிசீலித்து வருவது பெரிய வாய்ப்பாக அமைகிறது,” என ALA குழும துணைத்தலைவர் மற்றும் இணை நிறுவனர் விட்டோரியோ ஜென்னா கூறியுள்ளார்.
“இந்த துறை தீவிரமான சான்றிதழாக்கம், விதிகள் பின்பற்றல் மற்றும் பின் தொடரும் தன்மையின் தேவையை கொண்டுள்ளது பிரத்யேகமான சப்ளை செயின் தீர்வுக்கான தேவையை உருவாக்கியுள்ளது,” என்று அந்நிறுவன சர்வதேச முதன்மை செயல் அதிகாரி விகாஸ் சத்தா கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan

