Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை - ஆப்பிள் நிறுவனம் இலக்கு என்ன?

ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம் அதன் விற்பனையாளர்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை - ஆப்பிள் நிறுவனம் இலக்கு என்ன?

Monday April 22, 2024 , 1 min Read

ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம் அதன் விற்பனையாளர்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ​​ஆப்பிளின் விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்கள் இந்தியாவில் 1.5 லட்சம் பேர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். ஆப்பிள் நிறுவனத்திற்காக இரண்டு ஆலைகளை நடத்தி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

“இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் பணியாளர்கள் நியமனத்தை அதிகப்படுத்துகிறது. உத்தேசமான மதிப்பீட்டின்படி, அதன் விற்பனையாளர்கள் மற்றும் உதிரிபாகங்கள் சப்ளையர்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தப் போகிறது,” என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
Apple

இது தொடர்பாக பிடிஐ செய்தி ஏஜென்சி ஆப்பிள் நிறுவனத்திடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது இது தொடர்பாக பதிலளிக்க மறுத்து விட்டது. அடுத்த 4-5 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தியை ஐந்து மடங்கு அதிகரித்து சுமார் 40 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ. 3.32 லட்சம் கோடி) அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தகவல்களின் படி, 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக அதிக வருவாயுடன் இந்திய சந்தையை ஆப்பிள் நிறுவனம் முன்னிலை வகித்தது. அதே நேரத்தில் சாம்சங் அதிக விற்பனையின் அடிப்படையில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில், ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதியில் 10 மில்லியன் யூனிட் அளவைத் தாண்டி முதல் முறையாக ஒரு காலண்டர் ஆண்டில் வருவாயில் முதல் இடத்தைப் பிடித்தது என்று கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து ஆப்பிளின் ஐபோன் ஏற்றுமதி 2022-23ல் $6.27 பில்லியனில் இருந்து 2023-24ல் 12.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது வர்த்தக நுண்ணறிவு தளமான தி டிரேட் விஷன் படி, இது கிட்டத்தட்ட 100% உயர்வைக் கண்டுள்ளது.