பண்டிகைக்கால விற்பனையில் அமோக தொடக்கம் கண்ட அமேசான், ஃபிளிப்கார்ட்!
அடுக்கு- II, III நகரங்களில் அதிகரித்த விற்பனை!
பண்டிகைக்கால விற்பனையில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் புதிய உச்சத்தை தொட்டுவருகின்றன. இ-காமர்ஸ் நிறுவனங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பண்டிகைக்கால விற்பனையை நடத்தி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை முதலே பண்டிகை விற்பனை வலுவான தொடக்கத்தைக் கண்டதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட் ஞாயிற்றுக்கிழமை தனது 'பிளிப்கார்ட் பிளஸ்' திட்டம்,
முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவிகித வளர்ச்சியைக் கண்டது. அதே நேரத்தில் சுமார் 45 சதவிகிதம் வாடிக்கையாளர் அடுக்கு- III நகரங்களில் இருந்து வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இதேபோல், அமேசான் இந்தியா துணைத் தலைவர் மணீஷ் திவாரி ஒரு அறிக்கையில்,
“அமேசான் இந்தியா இணையதளத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகபட்சமாக ஒரு நாள் விற்பனையைப் பெற்று விற்பனையாளர்கள் அளாவில் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
’அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021’, எங்கள் ஒரு மாத பண்டிகை கொண்டாட்டங்கள் வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளன, உள்ளூர் கடைகள், ஸ்டார்ட் அப் மற்றும் பிராண்டுகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் SMB-கள் உட்பட Amazon.in இல் பட்டியலிடப்பட்டுள்ள சிறிய விற்பனையாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர்.
அக்டோபர் 2 ஆம் தேதி பிரைம் அணுகலின் போது, நிகழ்வில் பங்கேற்கும் உள்ளூர் கடைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இருமடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் பிரைம் சந்தா தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமானதாக உள்ளது. மூன்றில் இரண்டு புதிய பிரைம் சைன்-அப், அடுக்கு II மற்றும் III நகரங்களில் இருந்து கிடைக்கின்றன மற்றும் வாடிக்கையாளர்கள் எட்டு இந்திய மொழிகளில் ஷாப்பிங் செய்கிறார்கள்.
”அடுக்கு II/III நகரங்களிலிருந்து ஆர்டர் பெறும் விற்பனையாளர்களின் எண்ணிக்கை 21 சதவிகிதம் மற்றும் 16 சதவிகிதம் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட அதிகமான விற்பனையாளர்கள் ஆர்டர்களைப் பெற்றனர்," என்றுள்ளார்.
இதேபோல், ஃபிளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கான ஆரம்ப அணுகல் கடந்த ஆண்டை விட 40 சதவிகித வளர்ச்சியைக் கண்டது. சுவாரஸ்யமாக, வாடிக்கையாளர் வரவில் சுமார் 45 சதவிகிதம் அடுக்கு-3 நகரங்களிலிருந்து கிடைக்கின்றன.
“இந்த ஆண்டு, ’தி பிக் பில்லியன் டேஸ் சேல்’ வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் உற்சாகமான பங்கேற்பைக் காணத் தொடங்கியுள்ளது. இணையவழி வணிகம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறுகிறது, மேலும், பயனர் நட்பு தொழில்நுட்ப மற்றும் நிதி கட்டமைப்புகள் அதன் தத்தெடுப்புக்கு உதவ உதவுகின்றன என்பது தெளிவாகிறது," என்று குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கிடையேயான போட்டி முந்தைய ஆண்டுகளைப் போலவே தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட்டின் தி பிக் பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசான் இந்தியாவின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (GIF) ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இரண்டு தளங்களும் பிளஸ் (பிளிப்கார்ட்) மற்றும் பிரைம் (அமேசான்) வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டிய அணுகலை வழங்கின. ஃபிளிப்கார்ட்டின் தி பிக் பில்லியன் டேஸ் (டிபிபிடி) விற்பனை எட்டு நாள் நிகழ்வாகும், இது அக்டோபர் 10 ஆம் தேதியுடன் முடிவடையும், அமேசான் இந்தியாவின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஒரு மாத கால விற்பனையாக இருக்கும்.
இந்த இரு நிறுவனங்களைப்போல மின்த்ரா, ஸ்னாப்டீல் மற்றும் பிற ஆன்லைன் தளங்களும் இதேபோன்ற விற்பனை நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.