தொழில்முனைவோர்கள் ஆகும் 213 தூய்மை பணியாளர்கள்: சென்னையில் பயிற்சி!
தொழில்முனைவோர்கள் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கழிவுநீர் குழாய்களை இயந்திரங்கள் மூலம் பராமரிக்கும் பயிற்சி வழங்கும் முகாம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை குடிநீர் வாரியபயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.
துப்புரவுப் பணியாளர்கள் 213 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னை குடிநீர் வாரிய கழிவுநீர் குழாய்களை பராமரிக்க பயிற்சி வழங்கப்பட்டது.
மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து இதனால் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, இவர்களை தொழில்முனைவோர்களாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனடிப்படையில், தொழில்முனைவோர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கழிவுநீர் குழாய்களை இயந்திரங்கள் மூலம் பராமரிக்கும் பயிற்சி வழங்கும் முகாம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை குடிநீர் வாரியபயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்க தேசிய தலைவர் ரவிக்குமார் நர்ரா, தென்னிந்திய தலைவர் சவுந்தரராஜன், சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் ஜெய்கர் ஜேசுதாஸ், தலைமை பொறியாளர் இரா.சிவமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், முகாமை தொடங்கி வைத்துப் பேசும்போது, இத்தகைய உன்னதமான முயற்சிக்கான வழிகாட்டுதலில், தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு செய்யப்பட்டது.
"இறந்து போன துப்புரவுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், 213 பேரை கண்டறிந்து, அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.
இவர்களை சென்னை குடிநீர் வாரிய கழிவுநீரகற்று பணிகளில் ஈடுபடுத்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 7 ஆண்டுகளுக்கு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.524 கோடி இறுதி செய்யப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்வதற்கும் இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் தொழில்துறையில் புதுமையாக்கத்தை ஊக்குவிக்க 14 தமிழக ஸ்டார்ட் அப்களுக்கு அரசு நிதியுதவி!

