கொரோனா: பிரபாஸ், டெண்டுல்கர், மகேஷ் பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நன்கொடை!
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, சச்சின் டெண்டுல்கர், ஹிருத்திக் ரோஷன், மகேஷ் பாபு உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் கொரோனா நிவாரண நிதிக்கு பல லட்சங்கள் நன்கொடை அளித்துள்ளனர்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹிருத்திக் ரோஷன், மகேஷ் பாபு உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா சிகிச்சை வசதிகளுக்காக, தனியாக நிறுவனங்கள் சில நன்கொடை அறிவித்துள்ளன.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
"சச்சின் டெண்டுல்கர், பிரதமர் நிவாரண நிதி மற்றும் முதல்வர் நிவாரன நிதிக்கு தலா ரூ.25 லட்சம் அளிக்க முன்வந்துள்ளார்,” என சச்சினுக்கு நெருக்கமான வட்டாரம் சார்பில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் இர்ஃபான் பதான் மற்றும் யூசுப் பதான், பரோடா காவல்துறைக்கு 4,000 முகமுடிகளை வழங்கியுள்ளனர். கிரிக்கெட் நட்சத்திரம் தோனி, ஓரு லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமி ரத்தன் சுக்லா, தற்போது மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர், மூன்று மாதச் சம்பளம், மற்றும் கிரிக்கெட் வாரிய பென்ஷன் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மல்யுத வீராங்கனை பஜ்ரங் பூனியா, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்ளிட்டோர் தங்கள் சம்பளத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.
திரை நட்சத்திரங்கள்
பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன், தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், பவண் கல்யான் உள்ளிட்டோர் நன்கொடை அளித்துள்ளனர். பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற பிரபாஸ், ஆந்திர மற்றும் தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.3 கோடி மற்றும் ரூ.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஆந்திர மற்றும் தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குறியவை. இந்தப் போராட்டத்தில் எங்கள் பங்காக, ஆந்திரா, தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி வழங்குகிறேன், என மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
“இதற்காக முடிந்தவர்கள் எல்லாம் நிதி வழங்க முன்வர வேண்டும். ஒவ்வொரு பங்களிப்பும் தாக்கம் செலுத்தும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ”
“பொறுப்புள்ள குடிமகன்களாக, ஊரடங்கு உத்தரவின் போது விதிகளை மதித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாம் ஒருவருக்கு ஒருவர் மற்றும் நமக்காக உதவிக்கொள்ள வேண்டும். மனிதகுலம் எழுச்சி பெற்று இந்த போரில் வெல்லும். அதுவரை பாதுகாப்பாக வீட்டில் இருங்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னணி நடிகர் பவண் கல்யாண், பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி நன்கொடை அளித்துள்ளார். நடிகர் ராம்சரண் ரூ.70 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். நகைச்சுவை பிரபலம் கபில் சர்மா மற்றும் பல்வேறு திரைப்பட பிரமுகர்களும் உதவிகளை அறிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினி காந்த் உள்ளிட்ட தமிழ் திரையிலக பிரபலங்கள், திரைப்பட தொழிலாளர்களுக்காக நன்கொடையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: சைபர்சிம்மன்