Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ஃபேஸ்புக் நட்பால் கோடீஸ்வரராக மாறிய நபர்: இப்படியும் நடக்குமா?

நண்பர் வீட்டுக்கு போன இடத்தில் நடந்த ஆச்சர்யம்!

ஃபேஸ்புக் நட்பால் கோடீஸ்வரராக மாறிய நபர்: இப்படியும் நடக்குமா?

Wednesday February 10, 2021 , 2 min Read

வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் எதிர்பார்த்தது நடக்காமல் போனாலும், சிலருக்கு அவர்கள் எதையுமே எதிர்பார்க்காத சூழலில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் தந்து அசத்திவிடுகிறது காலம். அப்படித்தான் நடந்தது சோகன் என்பவருக்கும்!


பிரபாகரன் மற்றும் சோகன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஃபேஸ்புக்கில் பேசி, பழகியவர்கள் காலப்போக்கில் நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர். பிராபகரன் கேரள மாநிலம் புத்தலத்தானி பரவன்னூர் பகுதியைச் சேர்ந்தவர்.


அதேபோல, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சோகன் ஹல்ராம். இருவேறு மாநிலங்களுக்களைச் சேர்ந்தவர்களிடம் உருவான நட்பு ஆழமானதாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவெடுத்தனர்.

லாட்டரி

பேச்சுவாக்கில், தனது ஊரான கேரளாவுக்கு வருமாறு சோகனுக்கு அழைப்பு விடுத்தார் பிரபாகரன். சரி என்று ஒப்புக்கொண்ட சோகன், தனது குடும்பத்தினருடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேரளாவுக்குச்சென்றுள்ளார். பிரபாகரனின் வீட்டில் தங்கினார். இருவரது குடும்பமும் பரஸ்பரம் நட்பு பாராட்டிக்கொண்ட நிலையில், கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றலாத் தலங்களுக்கு இரு குடும்பத்தினரும் சென்று இனிமையாகப் பொழுதைக் கழித்தனர்.


அப்போது இருவரும் தாங்கள் செய்து வரும் தொழில் குறித்து மனம் விட்டுப் பேசினர். எதிர்காலத்தில் தொழிலை எப்படி எல்லாம் கொண்டு செல்லலாம் எனவும் பேசியுள்ளனர். அப்போது பிரபாகரன், சோகனிடம் தனது லாட்டரி ஏஜென்சி தொழில் குறித்துக் கூறியுள்ளார்.

அதோடு கேரளா லாட்டரியில் பம்பர் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து பிரபாகரன் மூலமாக 5 பேருக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கக்கூடிய லாட்டரி சீட்டை சோகன் ஹல்ராம் வாங்கினார். இதையடுத்து சோகன் தனது குடும்பத்தினருடன் கர்நாடகா செல்லத் தயாரானார்.

சோகன் குடும்பத்தினரை, பிரபாகரன் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்தனர். இதற்கிடையில்தான் அதிர்ஷ்ட தேவதையின் அழைப்பும் வந்துள்ளது.

ஆம்! இந்த சூழ்நிலையில் சோகன் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.1 கோடி விழுந்தது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த பிரபாகரன், உடனடியாக சோகனுக்கு இந்தத் தகவலை தெரிவித்தார்.

ஆனால் இதை நம்ப முடியாமல் சோகன் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். உடனே அவர்களைத் திரும்ப வருமாறு பிரபாகரன் அழைத்த நிலையில், சோகன் குடும்பத்தினர் பிரபாகரனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.


முகநூல் மூலம் கிடைத்த நட்பின் காரணமாக இன்று சோகன் கோடீஸ்வரராக மாறியுள்ளார். இப்படியொரு ஆச்சரியம் நடக்கும் என அவர் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. தன்னை கோடீஸ்வரனாக மாற்றிய பிரபாகரனுக்கு, சோகன் குடும்பத்தினர் மனமார நன்றியினை தெரிவித்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘சே இப்படி ஒரு பிரண்ட் நமக்கு இல்லாமல் போயிட்டானே!’ என்று தங்கள் விரக்தியை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

வெயிட் பண்ணுங்க பாஸ் நல்லது நடக்கும்!

தகவல் உதவி: ஏசியாநெட் மலையாளம்