F1 ரேஸ் காரின் விலை ரூ.95 கோடியா? A டூ Z விளக்கம்...
உலகின் காஸ்ட்லி கார்களாக அறியப்படும் ஃபார்முலா 1 ரேஸ் கார்களை உருவாக்க ஒரு காருக்கு ரூ.95 கோடி வரை செலவு பிடிக்கும் என தெரிகிறது. அதாவது சுமார் 100 மில்லியன் டாலருக்கு மேல் இதன் உற்பத்தி செலவு இருக்குமாம். அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
உலக அளவில் காஸ்ட்லியான விளையாட்டுகளில் ஒன்றாக அறியப்படுகிறது F1 ரேஸிங். ‘வ்ரூம்..வ்ரூம்...’ என பந்தயக் கார்கள் அதன் சர்க்யூட்டை முன்னும் பின்னும், வலதும் இடதுமாக வலம் வரும் அழகே பார்க்க அற்புதமாக இருக்கும்.
காட்சி ஊடகத்தின் ஊடாக அதை பார்க்க பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஹாமில்டன், மைக்கேல் ஷூமேக்கர், மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், செபாஸ்டியன் வெட்டல், இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் என பலரும் இந்த வகை காரின் அசாத்திய கார் ஓட்டிகள்தான்.
தொழில்நுட்பம், பொறியியல், வடிவமைப்பு முதலியவற்றை சேர்த்து வடிவமைக்கப்படுவது தான் ஃபார்முலா 1 ரேஸ் கார். இந்த மூன்றும் ஓட்டறைப்புள்ளியில் இணைந்து உலகின் அதிவேகமான, மேம்பட்ட கார் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அதன் விலையும் கூடுகிறது.
உலகின் காஸ்ட்லி கார்களாக அறியப்படும் ஃபார்முலா 1 ரேஸ் கார்களை உருவாக்க ஒரு காருக்கு ரூ.95 கோடி வரை செலவு பிடிக்கும் என தெரிகிறது. அதாவது, சுமார் 100 மில்லியன் டாலருக்கு மேல் இதன் உற்பத்தி செலவு இருக்குமாம்.
F1 ரேஸ் கார்கள் விலை ஏன் அதிகம்?
F1 கார் விலைகள் அதிகம் இருக்கக் காரணமே இதன் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் மெட்டீரியல் மற்றும் காம்போனென்ட்ஸும் தான். வேகம் மற்றும் இலகுவான எடைக்காக வேண்டி ஆயிரக்கணக்கான தனித்தனி பாகங்களைக் கொண்டு இந்த கார்கள் வடிவமைக்கப்படுகிறது.
இந்த காம்போனென்ட் ஒவ்வொன்றையும் பிரத்யேகக் குழுக்கள் உருவாக்குவது இதன் செலவுகள் கூட காரணம். அதனால் இதன் ஸ்பேர்கள் ஒவ்வொன்றின் விலையும் அதிகம். எஞ்சினுக்கு மட்டுமே சுமார் 10 மில்லியன் டாலர்கள் வரை செலவு பிடிக்குமாம்.
அது தவிர, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த பணிகளுக்காகவும் தனியே அணிகள் செலவு செய்ய வேண்டி இருக்குமாம். பெரும்பாலும் இந்த கார்களை வடிவமைப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பணி எனத் தெரிகிறது. கார்களை மேம்படுத்தும் பொருட்டு அவ்வப்போது சோதனைகளை மேற்கொண்டு, புதிய காம்போனென்ட்களை உருவாக்க வேண்டி இருக்குமாம். இந்த ஆராய்ச்சி சார்ந்த செலவுகளும் கார்களை உருவாக்கும் செலவுகளுக்கு நிகராக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு கடந்த 2022-ல் ஃபார்முலா 1 கார் ரேஸ் எஞ்சின் Freeze என்ற கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, ஒவ்வொரு சீசனிலும் அணிகள் ஒவ்வொன்றும் அதிகபட்சம் மூன்று எஞ்சின்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதே போல, மூன்று எஞ்சினுக்கு மேல் கார் ஓட்டிகள் பயன்படுத்தினால் பெனால்டி செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளது.
முக்கியமாக இந்த நேரத்தில் எஞ்சினின் பவர் யூனிட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாதாம். இது ஃபார்முலா 1 கார் ரேஸ் உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாம்.
எஞ்சின்: 1.6-லிட்டர் V6 டர்போசார்ஜ்டு ஹைப்ரிட் எஞ்ஜினை ஃபார்முலா 1 கார்களில் பயன்படுத்தபடுகிறதாம். இதன் ஹார்ஸ்பவர் 1000 ஹெச்.பி-க்கு மேல். மணிக்கு 200 மைல் வேகத்தில் பறக்கும் இந்த கார்தான் பூமியின் அதிவேக என்ஜின் என அறியப்படுகிறது.
இந்தியாவில் ஃபார்முலா 1: கடந்த 2013-க்கு பிறகு இந்தியாவில் ஃபார்முலா 1 ரேஸ்கள் நடைபெறவில்லை. உத்திர பிரதேச மாநிலம் புத் சர்க்யூட்டில் இந்த ரேஸ்கள் நடைபெற்றன. 2011-ல் இந்தியாவில் முதல் சீசன் தொடங்கியது. இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் சீசன் 2011, 2012 மற்றும் 2013 என மூன்றையும் செபாஸ்டியன் வெட்டல் வென்றார். அதன்பிறகு, இதுவரை F1 ரேஸ் நடைபெறவில்லை. ஹைதராபாத் நகரில் ஃபார்முலா E ரேஸ் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த சர்க்யூட்டில் முதல் சீசன் அண்மையில் நடைபெற்றது.
எலக்ட்ரிக் ஃபார்முலா ஒன் ரேஸ் கார் - ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் அசத்தல் தயாரிப்பு!
Edited by Induja Raghunathan