சிறிய இறைச்சி கடைகளின் விற்பனை மற்றும் வருமானத்தை பெருக்க உதவும் 'Happy Chops' - Tendercuts-இன் புதிய முயற்சி!
டென்டர்கட்ஸ் பிராண்டில் சராசரியாக ஒரு பில் 500ரூபாய்க்கு மேல். ஆனால் மற்ற இறைச்சி கடைகளில் 240 ரூபாய் மட்டுமே. எங்களுடன் இணையும் போது அவர்களுக்கு ஒரு பில் மூலம் கிடைக்கும் வருமானம் உயரும். இதனால் எங்களுடன் இணைவதால் கடைகளுக்கு லாபம்தான் என்றார்.
கடந்த பத்திருபது ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் பெரிய அளவுக்கு வளர்ச்சி உருவாகி இருக்கிறது. ரீடெய்ல், சினிமா, ஷாப்பிங், பயணம் என அனைத்து இடங்களிலும் அனுபவமும் டெக்னாலஜியும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால், ஒரே ஒரு இடத்தில் மட்டும் எந்த பெரிய முன்னேற்றமும் இல்லை - அது இறைச்சி கடைகள்.
இந்த கடைகளில் தூய்மையையும், டெக்னாலஜியையும் கொண்டுவந்தது ‘'. தற்போது இந்த நிறுவனம் 30க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளை கொண்டுள்ளது. மேலும், இணையம் மூலமாகவும் இறைச்சி வாங்க முடியும். இந்த நிலையில் அடுத்தகட்டமாக நகரத்தில் உள்ள இதர இறைச்சி கடைகளை இணையம் மூலம் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ‘டெண்டர்கட்ஸ்’

Tendercuts மற்றும் Happy Chops நிறுவனர் நிஷாந்த் சந்திரன்
இறைச்சி கடைகளை இணைக்கும் Happy Chops
’' 'ஹாப்பி சாப்ஸ்' என்னும் இந்த பிராண்ட் மூலம் சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் டெக்னாலஜி மூலம் (ஆப்) இணைக்கப்பட்டுள்ளன. டெக்னாலஜி மூலம் இணைக்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஹேப்பி சாப்ஸ் அறிமுக நிகழ்ச்சியில் அதன் தலைமைச் செயல் அதிகாரி நிஷாந்த் சந்திரன் கூறினார்.
அறிமுக நிகழ்ச்சி முடிந்த பிறகு அவருடன் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
ஏற்கெனவே ’டெண்டர் கட்ஸ்’ என்னும் பிராண்ட் சிறப்பாக செயல்படும் போது, நகரில் இருக்கும் இறைச்சிக் கடைகளை ஏன் இணைக்க வேண்டும் என்னும் கேள்விக்கு விரிவாக பதில் அளித்தார் நிஷாந்த்.
எங்களுடைய ஆரம்பகால திட்டமே ஏற்கெனவே செயல்பட்டு வரும் கடைகளை டெக்னாலஜி மூலம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், 2016ம் ஆண்டு சந்தை அதற்குத் தயராகவில்லை. அதனால்தான் நாங்கள் ஆன்லைன் மூலம் கடைகள் கொண்டுவந்தோம் இதன் மூலம் இதுவரை 30 கடைகளை தொடங்கியிருக்கிறோம்.
”ஆனால், ஹாப்பி சாப்ஸ் மூலம் சில மாதங்களிலே 100 கடைகளை இணைத்திருக்கிறோம். இன்னும் சில மாதங்களில்10 நகரங்களில் 300க்கும் மேற்பட்ட கடைகளை இணைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு,” என நிஷாந்த் கூறினார்.
ஒவ்வொரு கடைக்கும் குறிப்பிட்ட எல்லையில்தான் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். நீங்கள் டெக்னாலஜி மூலம் கொண்டுவந்தாலும் வருமானம் எந்த அளவுக்கு உயரும் வாய்ப்பு இருக்கிறது? ஏன் சிறு கடைகள் உங்களிடம் வரவேண்டும் என்னும் கேள்விக்கும் பதில் கொடுத்தார் நிஷாந்த்.
இப்போது வாட்ஸ்ஆப் இல்லாமல் பிஸினஸ் செய்ய முடியாது என்னும் நிலை இருக்கிறது. ஏனென்றால் வாடிக்கையாளர்கள் அதிகம் இதனைதான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், கடைகள் வாட்ஸ் ஆப் மட்டுமே பயன்படுத்தி வெற்றி அடைய முடியாது.
உதாரணத்துக்கு, ஒரு ஞாயிற்றுகிழமை அன்று சில நூறு ஆர்டர்கள் வருகிறது என்றால், அனைத்துக்கும் எவ்வளவு பணம் எந்த முகவரிக்கு கொடுக்க வேண்டும், எவ்வளவு பணம் என்பதை கையாள முடியாது. அதனால் நேரம் வீணாகும்.
அவர்கள் தனியாக செய்வதைவிட, ‘ஹாப்பி சாப்ஸ்’ ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் வழக்கமாக வாங்கும் கடையில்தான் வாங்குவார்கள் என்றாலும், கடைக்காரருக்கு இன்று எவ்வளவு ஆர்டர் வரும் என்பது உள்ளிட்ட பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
தவிர கடைகள் வழங்கப்படும் இறைச்சியில் எந்த வித்தியாசமும் இருக்காது. சிக்கன் வாங்குகிறீர்கள் என்றால் தோல் எடுக்க வேண்டுமா, சின்ன பீஸ் வேண்டுமா என்பது உள்ளிட்டவற்றை மட்டுமே கொடுப்பார்கள். ஆனால், எங்களுடன் இணைந்தால் பல வகையான கட்டிங் முறைகள், விற்பனை யுத்திகளை கடைகளுக்கு வழங்குகிறோம்.

வழக்கமான சிக்கன் ஒரு கிலோ என்னும் அளவில் மட்டுமே விற்பார்கள். லெக் பீஸ் மட்டும் வேண்டும், போன்லெஸ் வேண்டும் என்றால் விலை மாறுபடும். இதுபோன்றவற்றை சிறு கடைகள் செய்வதில்லை, அவற்றை எப்படி சிறப்பாகச் செய்வது என்பதற்கான ஆலோசனையை வழங்குகிறோம், என்றார்.
இறைச்சி கடைகளில் சிக்கன் மட்டன் மட்டுமே விற்கப்படுகிறது. ஆனால், எங்களுடன் இணைவதால் கடல் உணவுகளையும் எங்களால் அவர்களுக்குக் கொடுக்க முடியும். இறைச்சி கடைகள் எங்கு கோழி வாங்குகிறார்களோ அங்கே வாங்கிக்கொள்ளலாம். ஒருவேளை தேவைப்பட்டால் எங்கள் நெட்வொர்க் மூலமும் வாங்கலாம்.
தவிர மக்கள் கோவிட்டுக்கு பிறகு வீட்டில் சாப்பிடுவதை கணிசமாக உயர்த்தி இருக்கிறார்கள். கடையில் சாப்பிடும் உணவினை வீட்டில் சமைத்து சாப்பிட விரும்புகிறார்கள். இதற்கு ஏற்ப இறைச்சி கட்டிங் இருக்க வேண்டும். மசாலாவுடன் கொடுக்கும்போது வீட்டிலே சமைத்து சாப்பிடுகிறார்கள். இதுவரை இறைச்சி கடைகள் இறைச்சியை மட்டுமே கொடுத்துவந்தன. ஆனால், இதுபோன்ற மதிப்புகூட்டப்பட்டவற்றை கொடுக்கும்போது வருமானம் உயரும்.
”டென்டர்கட்ஸ் பிராண்டில் சராசரியாக ஒரு பில் 500ரூபாய்க்கு மேல் இருக்கும். ஆனால் மற்ற இறைச்சி கடைகளில் 240 ரூபாய் மட்டுமே. எங்களுடன் இணையும் போது அவர்களுக்கு ஒரு பில் மூலம் கிடைக்கும் வருமானம் உயரும். இதனால் எங்களுடன் இணைவதால் கடைகளுக்கு லாபம்தான்,” என்றார்.
டெலிவரி மற்றும் பேமெண்ட் குறித்து கேட்டதற்கு பேமெண்ட் எங்களுக்குதான் வரும். இதற்கான கட்டணமாக 8 சதவீதம் வசூலிக்கிறோம். டெலிவரியில் சில மாடல்கள் இருக்கிறது. கடைகளில் ஆட்கள் இருந்தால் அவர்களே சைக்கிள் அல்லது வாகனத்தில் டெலிவரி செய்துவிடுவார்கள். இல்லை என்றால் டன்ஸோ உள்ளிட்ட ஆப்கள் மூலமாக டெலிவரி இணைக்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் டெலிவரி செய்யப்படும்.
வாடிக்கையாளர்களுக்கு நேரம் மீதமாகும். நேரத்துக்கு மதிப்பு கொடுக்கும் வாடிக்கையாளர் உயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். கடைகளும் அதிக வாடிக்கையாளர்களைக் கையாள முடியும், அவர்களுக்கு வருமானமும் கிடைக்கும் என்பதால் இந்த செயலியை விரிவாக்கம் செய்யும் பணியில் இருக்கிறோம். கடைகளும் ஆர்வமாக இருக்கிறார்கள், என நிஷாந்த கூறினார்.
இந்த சந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்னும் கேள்விக்கு, இந்தியாவில் இறைச்சி சந்தை என்பது 4 லட்சம் கோடி ரூபாய் சந்தை. ஆனால், நாங்கள் மட்டுமல்லாமல்லாமல் ஒட்டுமொத்த ஆன்லைன் / டெக்னாலஜி நிறுவனங்களின் விற்பனை ரூ.2000 கோடி கூட கிடையாது. 0.5 சதவீதம் கூட இன்னும் சென்றடையவில்லை என்பதால் பெரிய அளவிலான வளர்ச்சி இருக்கிறது. டெக்னாலஜி மாற்றத்துக்கு சந்தையும் தயாராக இருக்கிறது என்பதால் நீடித்த வளர்ச்சி இருக்கிறோம் என கணிக்கிறோம், என்கிறார் நிஷாந்த சந்திரன்.
இறைச்சி கடைகளுக்கான தொழில்நுட்ப சேவை ஸ்டார்ட் அப் ‘The Meat Chop' ரூ.7கோடி நிதி திரட்டியது!

