ஜோ பைடனின் 21 நிமிட நம்பிக்கை உரை: வடிவமைத்த இந்திய வம்சாவளி இளைஞர்!
இந்திய மக்கள் பெருமை கொள்ளும் விஷயமும் அடங்கியுள்ளது!
அமெரிக்க அதிபர்களின் வரலாற்றில் அவர்கள் நிகழ்த்தும் தொடக்க உரை என்பது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் பதவியேற்பு விழாவில் இவர்கள் உரை நிகழ்த்துவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அந்த பாரம்பரியத்தின்படி நேற்று அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் 21 நிமிடம் நீண்ட உரையை நிகழ்த்தினார்.
”இந்த 21 நிமிட உரையில்; எல்லா அமெரிக்க மக்களுக்கும் நான் அதிபர். என் முழு ஆத்மாவும்; அமெரிக்காவை ஒன்றிணைத்தல், மீண்டும் கட்டியெழுப்பவதில் தான் இருக்கிறது. நமது அரசியலமைப்பையும், நமது ஜனநாயகத்தையும் நான் பாதுகாப்பேன்," என்று முழுக்க முழுக்க நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்திருந்தார்.
இந்த உரைக்கு நியூயார்க் டைம்ஸ் உட்பட முன்னணி பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்தித்தன. இதில் என்ன விஷயம் என்கிறீர்களா?
இந்த உரை பாராட்டப்படுவதில் இந்திய மக்கள் பெருமை கொள்ளும் விஷயமும் அடங்கியுள்ளது.
ஆம்... பைடன் பேசிய தொடக்க உரையை வடிவமைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்கும் ஆச்சரியம் தரக்கூடிய உண்மை. அவர் பெயர் வினய் ரெட்டி.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினய், பைடனின் உரையை தயாரிக்கும் குழுவை வழிநடத்த்தியுள்ளார். பதவியேற்பின் தொடக்க உரை மட்டுமல்ல, பிரச்சாரத்தின் போது பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பேசிய உரையும் இவர் தயாரித்து கொடுத்ததுதான்.
ஒபாமா இரண்டாவது முறையாக அதிபரானபோது பைடன் துணை அதிபராக இருந்தார். அப்போதும் இந்த வினய் ரெட்டி அவர்களின் உரையை வடிவமைக்கும் குழுவில் தலைமை அதிகாரியாக இருந்துள்ளார்.
தற்போதைய தெலங்கானாவில் உள்ள பொதிரிடெடிபெட்டா கிராமம் தான் வினய் குடும்பத்தின் பூர்வீகம். பல ஆண்டுகள் முன்பாகவே இவரின் பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு புலம்பெயர, அங்கேயே பிறந்து வளர்த்துள்ளார் வினய்.
ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பு, மியாமி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் என அரசியல் அறிவியல் மற்றும் தத்துவத்தில் இரட்டைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
வாழ்த்துக்கள் வினய் ரெட்டி!