முதல்நாள் திருமணம்; மறுநாள் போர்க்களம்: உக்ரைனில் துப்பாக்கி ஏந்திய புதுமண தம்பதி!
திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு எந்த நாட்டிற்கு செல்லலாம் என திட்டமிடுபவர்கள் மத்தியில், நாட்டிற்காக துப்பாகி ஏந்தி போர்க்களம் புகுந்த புதுமண தம்பதி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு எந்த நாட்டிற்கு செல்லலாம் என திட்டமிடுபவர்கள் மத்தியில், நாட்டிற்காக துப்பாகி ஏந்தி போர்க்களம் புகுந்த புதுமண தம்பதி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு நடுவே சிம்பிளாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்தி போரில் இறங்கிய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு:
அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கைகளை கட்டவிழ்ந்து இன்றுடன் 5 நாட்கள் ஆகிறது. உக்ரைனின் கீவ் நகரை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் துப்பாக்கி சத்தமும், வெடி சத்தமும் மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவை கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்ள, உக்ரைனுக்கு ஆதரவாக பலர் உதவிக்கு வராதது மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்கள் தீக்கிரையாக்கப்படுவதையும், போரில் வீரர்கள் கொத்து கொத்தாக மடிவதையும் சோசியல் மீடியாக்களில் காண முடியாமல் உலக மக்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்நிலையில், தீவிரமடைந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையில் புதுமண தம்பதி செய்த காரியம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
போராட்ட களம் டூ போர்க்களம்:
2019ம் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்ற போது, யாரினா அரீவா, சீவியடூஸ்லாவ் பர்ஸின் இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு, நாளடைவில் காதலாக கனிந்தது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
இருவீட்டார் சம்மதத்துடன் மே 6ம் தேதி கோலாகலமாக திருமணத்தையும், ரஷ்யாவில் உள்ள வால்டாய் மலையின் டினீப்பர் நதிக்கரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் விருந்தையும் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ரஷ்யாவால் உக்ரைனில் வெடித்துள்ள போரால் ‘நாளை யாருக்கும் எதுவும் நடக்கலாம்’ என்ற பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, நமக்கு ஏதாவது ஆபத்து நேரும் முன்பு, திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என யாரினா அரீவா, சீவியடூஸ்லாவ் பர்ஸின் இருவரும் முடிவெடுத்தனர். இதனையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள தேவாலயம் ஒன்றில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சிம்பிளாக திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.
தேவாலயத்திற்குள் இவர்கள் திருமணம் நடந்து கொண்டிருந்த போது தான் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்குள் அனுப்பியுள்ளது. வெளியில் துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகளின் ஓயாத சத்தத்திற்கு நடுவில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு அடுத்த நாளே கையில் துப்பாக்கியுடன் போர்களத்திற்கு தயாராகியுள்ளனர்.
இதுகுறித்து புதுமண தம்பதி கூறுகையில்,
“மிகப் பிரமாண்டமாகத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். ஆனால் போர்ச் சூழல் எங்களை இந்த நிலைக்கு உள்ளாக்கிவிட்டது. இருவரும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட உள்ளோம். இதில் எங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், அதற்கு முன் ஒன்றாக வேண்டும் என முடிவு செய்தோம். குண்டு சத்தங்களுக்கு மத்தியில் எங்கள் திருமணம் நடைபெற்றது அச்சமாக இருந்தது. ஆனால் எங்களுக்கு இது மகிழ்ச்சிக்குரிய நாள்," என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ரஷ்யா தொடுத்த போரால் உக்ரைன் நிலைகுழைந்து வருவதை கருத்தில் கொண்ட எவ்வித ஆடம்பர கொண்டாட்டங்களும் இல்லாமல் இந்த காதல் ஜோடி, வெடிகுண்டு, துப்பாக்கி சத்தங்களுக்கு இடையே இணையராக இணைந்தனர்.
அரீவா மற்றும் ஃபர்சின் இருவரும் பிராந்திய பாதுகாப்புப் படையில் இணைந்துள்ளனர். இது உக்ரைனின் ஆயுதப் படைகளில் தன்னார்வலர்களைக் கொண்ட படையாகும். உக்ரைன் அரசு போரில் ஈடுபட வரும் தன்னார்வலர்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. அப்படி புதுமண தம்பதியின் கைக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டதும், இருவரும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சியான ஐரோப்பிய சாலிடாரிட்டியின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.
திருமணமானவுடன் கையில் மலர்கொத்துடன் தேனிலாவிற்கு ஆயத்தமாக வேண்டிய புதுமண தம்பதி, நாட்டை காப்பதற்காக கையில் துப்பாக்கியுடன் யுத்த களம் புகுந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது.