Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

2 வினாடிக்கு ஒரு மின்சார ஸ்கூட்டர்: தமிழகத்தில் உருவாகும் Ola-வின் 500 ஏக்கர் தொழிற்சாலை!

எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் டீஸர் காட்சி வெளியீடு!

2 வினாடிக்கு ஒரு மின்சார ஸ்கூட்டர்: தமிழகத்தில் உருவாகும் Ola-வின் 500 ஏக்கர் தொழிற்சாலை!

Tuesday March 09, 2021 , 2 min Read

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிலையத்தை 'ஓலா ஃபியூச்சர்ஃபாக்டரி’ 'Ola Future Factory' என்ற பெயரில் உருவாக்க இருப்பதாக ஓலா நிறுவனம் அறிவித்தது.


இது ஆண்டுக்கு ஒரு கோடி வாகனங்களை உற்பத்தி செய்யும் எனவும், 2022ம் ஆண்டுக்குள் இது செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலையின் மொத்த பரப்பளவு 500 ஏக்கர் என்றும், அதன் மெகா ப்ளாக் 43 ஏக்கர் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய உலகளாவிய இரு சக்கர வாகன திறனில் 20% உற்பத்தி இதில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ola

இந்த தொழிற்சாலையின் மூலம் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் என 10,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. ஓலா தலைவர் மற்றும் குழு தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் கூறுகையில்,

“இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் கட்டம் 2 மில்லியன் டாலர் மதிப்பில் தயாராக இருக்கும். 4வது கட்டம் 2022ம் ஆண்டுக்குள் தயாராகும் என்றும், இந்த தளத்தில் ஆண்டுக்கு 1 கோடி வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கருக்கு மேல் இந்த பேக்டரி கட்டப்பட உள்ளது. ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒரு ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும் என்று அகர்வால் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

"இது முழு உற்பத்தித் திறன் கொண்ட 10 உற்பத்தி வரிகளைக் கொண்டிருக்கும். இது தொழில்துறை 4.0 கொள்கைகளில் கட்டப்பட்ட 3,000 Ai- இயங்கும் ரோபோக்களைக் கொண்ட மிக மேம்பட்ட இரு சக்கர தொழிற்சாலையாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
ஓலா

எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் டீஸர் காட்சிகளையும் ஓலா எலக்ட்ரிக் வெளியிட்டது. டெஸ்லா நாட்டிற்குள் நுழைவதை அதிகாரப்பூர்வமாக்கியதோடு, கர்நாடகாவை தமிழ்நாட்டிற்கு மேல் தேர்வு செய்துள்ள நிலையில் ஓலா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


ஓலா எலக்ட்ரிக் கடந்த ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த எடெர்கோ பி.வி என்ற புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதுடன், உலகளவில் மற்றும் தேசிய அளவில் பிரீமியம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் தனது பயணத்தை அறிவித்தது.

”இந்த தயாரிப்புகளை இந்தியாவில் தயாரிக்க பொறியியல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் சிறந்த உலகளாவிய திறன்களை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஐரோப்பிய வடிவமைப்பு, வலுவான பொறியியல் ஒத்துழைப்பு மற்றும் இந்திய உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி மூலம், ஓலா எலக்ட்ரிக் 100 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய இருசக்கர வாகன சந்தையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று அகர்வால் கூறினார்.

நாடு முழுவதும் விரிவான சார்ஜிங் மற்றும் பரிமாற்ற நெட்வொர்க்குகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


தொகுப்பு: மலையரசு