‘என் பேரக்குழந்தைகள் என்னைப் பார்த்து பயப்படுவதை நான் விரும்பவில்லை’ - தொழுநோய் பாதித்த பெண்ணின் சர்வைவல் கதை!
சர்வைவர் தொடரின் இந்த பாகத்தில், பல ஆண்டுகளாக தொழு நோயுடன் போராடும் சுனிதா என்பவரைப் பற்றியும், அந்த நோயால் அவர் சந்தித்து வரும் சவால்கள் பற்றியும் உலகிற்கு கொண்டு வந்திருக்கிறோம்.
சர்வைவர் தொடரின் இந்த பாகத்தில், பல ஆண்டுகளாக தொழுநோயுடன் போராடும் சுனிதா என்பவரைப் பற்றியும், அந்த நோயால் அவர் சந்தித்து வரும் சவால்கள் பற்றியும் உலகிற்குக் கொண்டு வந்திருக்கிறோம்.
அப்படி பாதிக்கப்பட்டு மீண்டவர் அவரின் குரலில் பதிவு செய்த பதிவு இது...
என் பெயர் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), எனக்கு 63 வயது. நான் தொழு நோய்களுக்கான காலனியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறேன். 90-களுக்கு முன்பாக, திருமணமான புதிதில் நானும் எனது கணவரும் எங்களுடைய குடும்பத்தாரால் வெளியேற்றப்பட்டோம்.
அந்த நேரத்தில் தொழுநோய்க்கான சிகிச்சை டெல்லிக்கு வந்துவிட்டதாகவும், அரசு இலவசமாகவே நோய் கண்டறியும் பரிசோதனையை மேற்கொள்வதாகவும் எங்களுக்குச் சொன்னார்கள்.
1992ம் ஆண்டு, நாங்கள் வசித்து வந்த ஆந்திரப் பிரதேசம், செகந்திராபாத்தில் இருந்து, (தற்போது தெலுங்கானாவில்) டெல்லிக்கு சென்று தொழுநோய்க்கான சிகிச்சை பெற முடிந்தது. ஆனால், அதற்குள் எனது தொழுநோய் என் நரம்புகளை பாதித்திருந்தது.
ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பழைய நண்பர் தொழுநோய் காலனியை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில், எங்களுக்கு பயம் இருந்தது, ஆனால், பல ஆண்டுகளாக தனக்கென நல்ல பெயரைப் பெற்ற சமூகத்தை நம்ப முடிவு செய்தோம்.

தொழு நோய் கண்டறியப்பட்டதில் இருந்து முதன் முறையாக நான் அங்கு தான் சக மனிஷியாக நடத்தப்படுவதை உணர்ந்தேன். எனக்கு அங்கு தேவையானதை விட அதிகமாகவே சுதந்திரம் கிடைத்தது. ஆனால், அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
நான் முறையாக பதிவு செய்யாததால் அரசு வழங்கிய தொழு நோய் பென்ஷனை தவறவிட்டேன். மிகவும் கடினமான அந்த காலக்கட்டத்தில் என் கணவர் தான் குடும்பத்தை காப்பாற்றினார்.
செகந்திராபாத்தில் உள்ள நல்ல குடும்பங்களுக்கு எங்களுடைய இரண்டு மகள்களையும் திருமணம் செய்து வைத்த சில நாட்களிலேயே எனது கணவர் இறந்து போனார். அவர் இறந்தபோது நான் வசித்து வந்த தொழுநோய் காலனியில் இருந்த 135 பேரும் என்னை தனிமையை உணராமல் பார்த்துக்கொண்டனர். எனது துக்கத்தில் பங்கு எடுத்துக் கொண்டனர்.
நிரந்தர குறைபாடு உள்ள தொழுநோயாளி என்பதால் எனக்கு யாரும் வேலை தர முன்வரவில்லை. மேலும், வேலை செய்ய வேண்டும் என்றால் உடல் உழைப்பு கட்டாயம், ஆனால் எனக்கு உடலிலும் அப்போது அந்த அளவுக்கு தேம்பில்லை.
சாப்பாடு என்றைக்குமே எனக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது இல்லை. ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் ஏழையாக பழக்கப்பட்ட ஒருவருக்கு, கையில் உள்ளதை வைத்து பசியாறிக் கொள்ளும் திறன் இருக்கும். ஆனால், தொழுநோயால் ஏற்பட்ட புண்களை கட்டி வைக்கவும், அதற்கு மருந்து வாங்கவும் ஆகும் செலவிற்கு என்னிடம் பணமில்லாதது பெரும் பிரச்சனையாக இருந்தது.
தொழுநோய் காலனியிலேயே பிறந்து வளர்ந்த என் பக்கத்து வீட்டுக்காரரான லதா என்பவர், நான் தொழுநோயாளியாகப் பதிவு செய்ய எனக்கு உதவினார். அதனால் அரசு வழங்கிய ஓய்வூதியத்தை என்னால் பெற முடிந்தது. ஆனால் அதுவும் பயன் அளிக்கவில்லை.

திடீரென அரசாங்கம் தொழுநோயை முற்றிலும் குணப்படுத்தி, நோயால் பாதிக்கப்பட்டவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டதாக அறிவித்தது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட நான், பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
தொழுநோயாளி என்பதால் என்னை யாரும் பார்க்க விரும்புவதில்லை. எனது தேகத்தில் தொழுநோயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அவர்களை அச்சமடைய செய்கின்றன. என்னை பார்க்கவே அஞ்சுபவர்கள் எப்படி எனக்கு பண உதவி செய்வார்கள் என நான் நம்ப முடியும்? தினந்தோறும் ஒரே மாதிரியாக தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
நான் தினமும் காத்துக்கொண்டிருப்பது, எனது மகள் டிக்கெட் அனுப்பி அவர்களை பார்க்க வரச்சொல்லும் அந்த ஒருநாளுக்காக தான். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே என்னால் அவர்களை பார்க்க முடியும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா லாக்டவுன் காரணமாக அவர்களை என்னால் சந்திக்க முடியவில்லை.
நான் தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்; என் பேரக்குழந்தைகள் என்னைப் பார்த்து பயப்படுவதை நான் விரும்பவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு என்னைப் பார்ப்பதால், வெளி உலகில் (தொழுநோய் காலனிக்கு வெளியே உள்ள உலகம்) எல்லோரையும் போல என்னைப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். என வேதனையுடன் தனது கதையை நிறைவு செய்துள்ளார்.
தொகுப்பு: கனிமொழி

