#தமிழக வேலை தமிழருக்கே: டிவிட்டரில் தமிழர் வேலை வாய்ப்புகாக பெருகும் குரல்!
தமிழகத்தில் மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான போராட்டம் டிவிட்டரிலும் எதிரொலித்துள்ளது. தமிழக வேலை வாய்ப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி பலரும் குறும்பதிவுகளை வெளியிட்டு வருவதால், #தமிழகவேலைதமிழருக்கே, #TamilnaduJobsForTamils ஆகிய ஹாஷ்டேகுகள் டிரெண்டிங் ஆகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதகாவும், அவர்கள் இடத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் நியமிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அண்மையில், தென்னக ரயில்வே துறையில் சுமார் 300 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி பொன்மலையில் பயிற்றுனர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனங்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி வருகின்றன்றனர். இதனிடையே இந்தப் போக்கை கண்டித்து தமிழ் தேசிய பேரியக்கம் அமைப்பு திருச்சியில் போராட்டம் நடத்தியது. இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் டிவிட்டரிலும் இந்த போராட்டம் எதிரொலித்துள்ளது. பலரும், தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு நிராகரிக்கப்படுவது குறித்து குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழக வேலைவாய்ப்புகளில் வடமாநிலத்தவர்கள் நியமிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பும் குறும்பதிவுகளை பலர் வெளியிட்டுள்ளனர்.
இந்த பிரச்சனையின் பல்வேறு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் குறும்பதிவுகள் அமைந்துள்ளன.
அண்மை காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மத்திய அரசு நியமனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை உணர்த்தும் புள்ளி விவரங்களை சிலர் பகிர்ந்துள்ளனர். இன்னும் சிலர், கர்நாடாக மற்றும் பிற மாநிலங்களில் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் விதிகளை சுட்டிக்காட்டி அதே வழியை தமிழகம் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த பிரச்சனை தொடர்பான தரவுகளை பகிர்ந்து கொள்ளுமாறும் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனும் முன்னாள் நிதிபதி ஹரிபரந்தாமனின் கருத்தையும் ஒரு சிலர் பகிர்ந்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் உள்ள நிலையை விளக்கும் வரைபட தகவலையும் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழகத்தைச் சேந்தவர்களுக்கான வேலை வாய்ப்பு புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் குறும்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.
இந்த குறும்பதிவுகள், #தமிழகவேலைதமிழருக்கே #TamilNaduJobsForTamils #தமிழக_வேலை_தமிழருக்கே, ஆகிய ஹாஷ்டேகுகளுடன் வெளியாகி வருவதால் இந்த ஹேஷ்டேகுகள் டிவிட்டரில் டிரென்டிங்காகி மேலும் கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழர்களின் உரிமைக்குரலாக எழுந்துள்ள குறும்பதிவுகள் சில:
இது, நாம் குரலை உயர்த்த வேண்டிய நேரம். இது நம் உரிமை. - வ.வே.ரா @vadivelraja6
இதே விதிகள் தமிழகத்திலும் தேவை- SundaraMahalingam @sundar217