ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பெரும்பகுதியை அள்ளிய ஜியோ - எத்தனை கோடி தெரியுமா?
6 சுற்றுடன் நிறைவடைந்த ஸ்பெக்ட்ரம் ஏலம்!
'ஏலங்களின் விற்பனை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது...'
அரசின் இரண்டு நாள் தொலைத் தொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 77,814.80 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றைகள் வாங்கப்பட்டது. இதில் ரிலையன்ஸ்-ன் ஜியோ 57,122 கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகளை ஏலம் எடுத்துள்ளது.
மத்திய தொலைதொடர்புத்துறை சார்பில் தொலைதொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்பட்டது கடந்த இரண்டு நாட்கள் நடந்த ஏலத்தில்,
77,814.80 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றைகள் வாங்கப்பட்டது. இன்றுடன் ஏலம் முடிவடைந்துவிட்டது. தொலை தொடர்புத்துறை நடத்திய இந்த ஏலத்தில் பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய மூன்று ஏலதாரர்கள் பங்கேற்றனர். இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 57,122.65 கோடி மதிப்புள்ள 488.35 மெகா ஹெர்ட்ஸ் அலைக் கற்றைகளை ஏலம் எடுத்தது.
ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 18,698.75 கோடி மதிப்புள்ள 355.45 மெகா ஹெர்ட்ஸ் ரேடியோ அலைகளையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 1,993.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 11.80 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தையும் வாங்கியுள்ளதாக தொலை தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏலத்தின் மூலம் நடப்பு நிதியாண்டு வருமானம் சுமார் 19,000 கோடி முதல் 20,000 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று அரசாங்கம் கூறியது.
இதையடுத்துதொலைத் தொடர்புத் துறை செயலாளர் அன்ஷு பிரகாஷ் இன்று மதியம் 12.45 மணிக்கு 6 சுற்று ஏலத்துடன் நிறைவடைந்ததாக அறிவித்தார்.
"எதிர்பார்த்ததை விட ஏலங்களின் விற்பனை சிறப்பாக இருந்தது” என்று அன்ஷூபிரகாஷ் கூறினார். மொத்தம், 77,814 கோடி ரூபாய் மதிப்புள்ள 855.60 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் மீது விதிக்கப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் 3% ஆக இருக்கும்."
நடப்பு நிதியாண்டில் ₹15,000 கோடிக்கு மேல் முன்பணம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் 10,000 கோடி முதல் 11,000 கோடி ரூபாய் இருப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி - business-standard | தமிழில்: மலையரசு