Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

மிகவும் எடை குறைவான சாட்டிலைட்: நாசாவுக்குத் தேர்வான தஞ்சை மாணவர்!

ரியாஸ்தீனின் பெம்டோ செயற்கைகோள் விண்ணில் ஏவ தேர்வு!

மிகவும் எடை குறைவான சாட்டிலைட்: நாசாவுக்குத் தேர்வான தஞ்சை மாணவர்!

Monday December 28, 2020 , 1 min Read

தஞ்சை மாணவர் ஒருவர் உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டு வகையான சாட்டிலைட்களை உருவாக்கியுள்ளார். இந்த சாட்டிலைட்கள் தற்போது விண்ணில் பறக்க இருக்கிறது.


தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியில் வசித்து வருபவர் ரியாஸ்தீன். தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வரும் மாணவர் ரியாஸ்தீன் தான் இந்த எடை குறைந்த பெம்டோ எனப்படும் செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளார்.


சிறுவயதில் இருந்தே அறிவியல் மீது ஆர்வம் கொண்டுள்ள ரியாஸ்தீன், அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம் மற்றும் நாசா நடத்தும் cubes in space என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில், 2019-2020ல் கலந்து கொண்டார்.

73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் ரியாஸ்தீனின் Femto செயற்கைக்கோள் விண்ணில் ஏவ தேர்வு செய்யப்பட்டது.
ரியாஸ்தீன்
நாசாவில் இருந்து, 2021 ஜூன் மாதத்தில் இந்த இரண்டு பெம்டோ செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. விஷன் சாட் (VISON SAT v1, v2) V1 மற்றும் V2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு FEMTO செயற்கைக் கோள்களும் 37 மிமீ உயரம் மற்றும் 33 கிராம் எடையுடையது.

இதனால் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெம்டோ செயற்கைக்கோள்கள் என்ற பெருமையை இது தட்டிச்சென்றுள்ளது. பாலி எதரி இமைடு அல்டம் என சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக்கால், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக்கொண்டு பெம்டோ செயற்கைக்கோள்களை உருவாக்கி இருக்கிறார் மாணவர் ரியாஸ்தீன்.


தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்களான இந்த இரண்டின் நோக்கம் வளிமண்டல மற்றும் விண்வெளி ஆய்வுகள் மற்றும் மைக்ரோ கிராவிட்டி பொருள்களை ஆராய்ச்சி செய்வதாகும். 11 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த இரண்டு செயற்கைகோள்கள் மூலம் 17 பாராமீட்டர்களைக் கண்டறிய முடியும். இதை உருவாக்கிய மாணவர் ரியாஸ்தீனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


தொகுப்பு: மலையரசு