5 ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்: டாடா குழுமம் உறுதி!
டாடா குழுமம் அடுத்த ஐந்தாண்டுகளில் செமிகண்டக்டர், துல்லிய உற்பத்தி, மின்சார வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் தொடர்புடைய தொழில்களில் ஐந்து லட்சம் நேரடி உற்பத்தி வேலைகளை உருவாக்கும், என்று டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்தார்.
டாடா குழுமம் அடுத்த ஐந்தாண்டுகளில் செமிகண்டக்டர், துல்லிய உற்பத்தி, மின்சார வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் தொடர்புடைய தொழில்களில் ஐந்து லட்சம் நேரடி உற்பத்தி வேலைகளை உருவாக்கும், என்று டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இந்திய தர மேலாண்மை அறக்கட்டளை நடத்திய கருத்தரங்கில் பேசிய சந்திரசேகரன்,
“இந்த வேலைவாய்ப்புகள் டாடா குரூப் உருவாக்கும் வேலை வாய்ப்புகள். குறைந்தபட்சம் 500-1000 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
உற்பத்தி ஒரு பெரிய வாய்ப்பு என்று குறிப்பிட்ட சந்திரசேகரன், உற்பத்தித்துறை வேலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தா விட்டால் இந்தியா தனது ‘விக்சித் பாரத்’ இலக்கை அடைய முடியாது, என்று கூறினார்.
இந்தியா தனது விக்சித் பாரத் இலக்கை அடைய மிகவும் உகந்த நிலையில் உள்ளது என்று கூறிய சந்திரசேகரன், உற்பத்தித்துறை வேலைகளை உருவாக்க மோடி அரசு பெரிய உந்துதலை அளித்துள்ளது, என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“இது இந்தியாவுக்கான தருணம். உத்வேகம் இருக்கிறது, அரசும் அதற்கு அதிக அழுத்தம் கொடுக்கிறது. ஒரு குழுமமாக நாங்கள் எங்கள் திட்டங்களைத் தொடங்கிய வேகம் நம்பமுடியாதது.“
செமிகண்டக்டருக்காக தோலேராவில் வரும் ஆலையாகட்டும், அல்லது அசாமில் வரும் ஆலையாகட்டும், அல்லது நாம் அமைக்கும் பேட்டரி ஆலையாகட்டும், அல்லது நாம் அமைக்கும் எலக்ட்ரிக் வாகன ஆலையாகட்டும், பல ஆலைகளை அமைக்கிறோம். அரசின் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் மதிப்புமிக்கவை.
இந்தியா உலகின் மனிதவள மூலதனமாகவும், உலகின் உற்பத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்காளராகவும் இருக்க முடியும்.
“உற்பத்தியாளர்களின் உலகத் தலைவராக நாம் அறியப்பட வேண்டுமென்றால், இரண்டு விஷயங்கள் தேவை - தயாரிப்பு அல்லது சேவையின் தரம் மற்றும் அனுபவத்தின் தரம். இரண்டிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் அப்படிச் செலுத்தினால் உற்பத்தியில் உலகத் தலமையிடத்தை பிடிக்க முடியும்,” என்றார் சந்திரசேகரன்.