BharatPe - PhonePe இடையேயான 5 ஆண்டு சட்டப்போராட்டம் சுமுகத் தீர்வை எட்டியது!
'Pe' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டப் போராட்டத்தில் இன்று ஏற்பட்ட சமூக தீர்வால் நீதிமன்றங்களில் நடந்து வந்த ஐந்தாண்டு சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
'Pe' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பான 'பாரத் பே' மற்றும் 'போன் பே' நிறுவனங்களுக்கு இடையே நிலவி வந்த சட்டப்போராட்டம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு முடிவுக்கு வந்தது.
இன்று இரு நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்ட செட்டில்மெண்ட் அறிவிப்பின்படி, நீதிமன்றங்களில் நடந்து வந்த ஐந்தாண்டு சட்டப் போராட்டத்தின் முடிவை அறிவிக்கின்றது.
2018 ஆம் ஆண்டில், PhonePe நிறுவனம் BharatPe நிறுவனம் Pe என்ற பின் ஒட்டு சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பியது. பாரத் பே பிராண்டில் Pe என்று தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட பின் ஒட்டைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியது.
இதனையடுத்து, பாரத் பே நிறுவனம் 'BharatPe' என்ற பெயரை தன் சேவைகளில் மட்டும் பயன்படுத்தத் தொடங்கியது. இது தொடர்பாக பாரத் பே போர்டு சேர்மன் ரஜ்னிஷ் குமார் கூறும்போது,
“இந்த தீர்வு தொழில்துறைக்கு சாதகமான வளர்ச்சியாகும். இரு தரப்பு நிர்வாகமும் காட்டிய முதிர்ச்சி மற்றும் நிபுணத்துவத்தை நான் பாராட்டுகிறேன், நிலுவையில் உள்ள அனைத்து சட்டச் சிக்கல்களையும் தீர்க்க நெருக்கமாக உழைத்து, வலுவான டிஜிட்டல் பேமெண்ட் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதில் நம் ஆற்றல் மற்றும் வளங்களை மையமாகக் கொண்டு முன்னேறிச் செல்வோம்,” என்றார்.
பின்னர், 2019ல், PhonePe தனது பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையான 'PhonePe'-டிரேட்மார்க்கை மீறியதாகக் கூறி, BharatPe-க்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, மேலும், BharatPe-இன் வர்த்தக முத்திரைக்கு எதிராக தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இன்று அறிவிக்கப்பட்ட தீர்வு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது, இரு தரப்பினரும் வர்த்தக முத்திரை பதிவில் ஒருவருக்கொருவர் எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற ஒப்புக்கொண்டனர். இது அவர்களின் அந்தந்த வர்த்தக முத்திரைகளை பதிவு செய்வதைத் தொடர வழிவகை செய்துள்ளது. PhonePe-இன் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகாம், இரு நிறுவனங்களுக்கிடையில் இணக்கமான தீர்மானத்தை வரவேற்றுள்ளார்.