தந்தை டிரைவர்; மகன் 15 வயதில் இயக்குநர்: சர்வதேச விழாவுக்குச் செல்லும் ‘தி மாஸ்க்’
'சர்வதேச கொரோனா குறும்பட விழா’ நடைபெற உள்ளது. இந்த குறும்பட விழாவுக்கு பீகாரிலிருந்து 3 நிமிடம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்று தேர்வாகியுள்ளது. 'தி மாஸ்க்’ என பெயரிடப்பட்ட அந்த குறும்படத்தை இயக்கியுள்ள சிறுவனுக்கு வெறும் 15 வயதுதான்.
கொரோனா நம் வாழ்க்கையை புரட்டி போட்டிருக்கிறது. பலர் வேலை இல்லாமல் வாழ்வாதாரங்களை இழந்து நின்றதை நம் கண் முன்னாள் கண்டிருந்தோம். இன்னும் சிலர் பசிக்கு உணவில்லாமல் இருந்ததையும் காண முடிந்தது. பலரின் வாழ்க்கையை மாற்றிய இந்த கொரோனா ஒரு சிறுவனின் வாழ்க்கையையும் மாற்றியிருக்கிறது. அவன் பெயர் சாந்து குமார்.
கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கியிருந்த நிலையில், அவன் ஒற்றை ஆளாக ஒரு குறும்படத்தை எடுத்து முடித்துள்ளான். இந்த மாதம் டெல்லியில் 'சர்வதேச கொரோனா குறும்பட விழா’ நடைபெற உள்ளது. இந்த குறும்பட விழாவுக்கு பீகாரிலிருந்து 3 நிமிடம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்று தேர்வாகியுள்ளது. 'தி மாஸ்க்’ என பெயரிடப்பட்ட அந்த குறும்படத்தை இயக்கியுள்ள சிறுவனுக்கு வெறும் 15 வயதுதான்.
யார் அந்த சிறுவன்?
பீகாரின் பின்தங்கிய பாட்னாவைச் சேர்ந்தவர் டிரைவர் ஒருவரின் மகன் தான் 15 வயதான சாந்து குமார். இவர் 'கீழ்கரி’ என்ற அமைப்பைச் சேர்ந்த சிறுவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் உதவியுடன் படத்தை இயக்கியுள்ளார். கீழ்கரி என்பது 2008ம் ஆண்டு கல்வித் துறையால் சிறுவர்களின் கிரியேட்டிவிட்டை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு.
புகழ்பெற்ற குழந்தை உரிமை ஆர்வலரும், கில்கரி அமைப்பின் இயக்குநருமான டாக்டர் ஜோதி பரிஹார்,
“பாட்னா கல்வித்துறையால் கடந்த 2008-ம் ஆண்டு கீழ்கரி அமைப்பு உருவாக்கப்பட்டது. ஏழைச் சிறுவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது,” என்று தெரிவித்துள்ளார்.
சாந்துகுமார் எழுதி இயக்கிய ‘தி மாஸ்க்’ குறும்படம் சர்வதேச குறும்படவிழாவில் ஒருபகுதியாக இருக்கப்போகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
‘நாம் வேலையை இழந்தபோதிலும், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து முன்னேறமுடியும்’ என்பதை படம் உணர்த்துகிறது. சாந்துகுமார் பீகாரை பெரும்படுத்தியுளார், ஜோதி நெகிழ்ந்துள்ளார்.
”படத்தை முடிக்க 5 நாட்கள் எடுத்துக்கொண்டேன். கில்கரி அமைப்பால் 5 சிறுவர்கள் உதவியுடன் படத்தை விரைவாக முடிக்க முடிந்தது. சிறுவர்களது கடின உழைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாவின் ஒருபகுதியாக அவர்களும் இருப்பார்கள்,” என்கிறார் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சாந்துகுமார்.
தகவல் உதவி - indiatimes | தொகுப்பு: மலையரசு