தென்னிந்திய விதவைப் பெண்ணின் குரலை உரைக்கும் 'பி செல்வி & டாட்டர்ஸ்’ குறும்படம்!
சென்னையைச் சேர்ந்த ஸ்ரே பேக்டரி நிறுவனம் சார்பில் வெளியான குறும்படம் 'பி செல்வி அண்ட் டாட்டர்ஸ்’ மெல்பேர்னில் திரையிடப்பட்டுள்ளது. பி செல்வி அண்ட் மகள்கள் சுயாதீன பொழுதுபோக்கு நிறுவனமான ஸ்ட்ரே பேக்டரியின் தயாரிப்பு ஆகும்.
இது ‘தென்னிந்தியாவிலிருந்து வரும் அசல் குரல்களை’ மையமாகக் கொண்டுள்ளது. இந்த படத்தை த்ரிஷ்யா இயக்கியுள்ளார். தன் கனவை நிறைவேற்றத் துடிக்கும் விதவைப் பெண் ஒருத்தியின் கதை. 25 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம், அந்த பெண்ணின் ஒட்டுமொத்த பயணத்தையும் விவரிக்கிறது.
’B Selvi & Daughters’ படம் குடும்பத்திற்கும் தொழிலுக்கும் இடையிலான போராட்டம். ஒரு பெண்ணின் இறுதி இலக்காக திருமணத்தை சமூகம் எவ்வாறு திணிக்கிறது என்பதை படம் விவரிக்கிறது. இதனிடையே தாய் மற்றும் மகளின் (பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட உறவு குறித்தும் படம் பேசுகிறது.
”தமிழ் சினிமாவில் தாயின் கதாபாத்திரத்தின் தன்மையின் அடர்த்தி குறைக்கப்பட்டு, வெறுமனே வீட்டு இல்லத்தரசி, பாராமரிப்பாளர், நாயகன், நாயகிக்கு உதவுபவராக மட்டுமே காட்டப்படுகிறார். தாய்மைக்கு வெளியே உள்ள பல்வேறு போராட்டங்களைக் குறித்தும், தாயின் ஆழமான சிக்கலான பக்கங்களை ஆராய விரும்பினோம்,” என்கிறார் படத்தின் இயக்குநர் த்ரிஷ்யா.
இந்த படம் அக்டோபரில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, பின்னர் விரைவில் யூடியூபில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் தாய் செல்வியாக கலிராணி மற்றும் மகளாக காயத்ரி சங்கர் நடித்திருக்கிறார். இது பற்றி நடிகர் கலைராணி,
“பெரிய அல்லது சிறிய இயக்குநர்கள் என்று யாரும் இல்லை. அவர்கள் தங்கள் படைப்புகளை வெளிபடுத்தும் விரும்புகிறார்கள். நான் அவற்றை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். இது இயக்குனரின் கனவு, அதை ஆதரிப்பது எனது வேலை,” என்று தெரிவித்துள்ளார்.
"ஒரு தயாரிப்பாளராக, பெண்களின் வாழ்க்கையை சாதகமாக பாவிக்கும் படைப்பில், பெண்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ஒரு கனவு. திரையில் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெண்களுக்கான இடங்களை உருவாக்க வேண்டும். இந்த படத்தின் மூலம் அதை நிஜமாக்க முடியும்,” என்கிறார் தயாரிப்பாளர் தரனா.
தனது வாழ்நாள் முழுவதையும் தனது குடும்பத்திற்காக அர்ப்பணித்த செல்வி, கணவரின் மரணத்திற்குப் பிறகு, இறுதியாக தனது தொழிலை நிறுவ முயற்சிக்கிறார். பெங்களூரில் ஒரு ஸ்டார்ட் அப்பில் டிஜிட்டல் மார்க்கெட்டராக இருக்கும் கவிதா, தனது தாயார் செல்வி, வீடு வீடாக சென்று சேலை விற்பனை செய்யும் வணிகத்தை ஆன்லைனில் மாற்ற உதவுகிறார்.
பல்வேறு தடங்களை தாண்டி வரும் செல்வி படத்தில் இறுதியில் இப்படி கூறுகிறார்.
“நான் சுயமாக சம்பாதித்து சொந்த காலில் நிற்கவேண்டும். அது தான் என் கனவு,” என்கிறார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் உரையாடலும் பெண்களுடன் தொடர்புடையவை. நம் சமுதாயத்தில் ஆணாதிக்கத்தின் தாக்கங்கள் மற்றும் தொழில்முனைவோர் உலகில் ஒரு பெண்ணாக இருப்பதற்கான சவால்கள் ஆகியவற்றைக் விவரிக்கிறது.
"பெண்களின் உந்துதல்கள் மற்றும் சவால்கள் குறித்தும், தொழில் மற்றும் தொழில் முனைவோர் தொடர்பாகவும், படம் பல மட்டங்களில் உண்மையான உரையாடலைத் தொடங்குகிறது என்று நம்புகிறேன், அந்த வகையில், படத்தின் குழுவினரில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். இது மாற்றத்துக்கான ஒரு படி,” என்கிறார் த்ரிஷ்யா.
ஆங்கிலத்தில்: டெபொலினா