Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இன்ஜினியரிங் மாணவர்களை வேலைக்கு தகுதியானவர்கள் ஆக்கும் சென்னை Skill-Lync

2018 ல் சூரியநாராயணன் மற்றும் சாரங்கராஜன் ஆகியோரால் துவங்கப்பட்ட Skill-Lync நிறுவனம் பொறியியல் மாணவர்கள் தங்கள் துறைக்கு ஏற்ற திறன் பெற உதவுகிறது.

இன்ஜினியரிங் மாணவர்களை வேலைக்கு தகுதியானவர்கள் ஆக்கும் சென்னை Skill-Lync

Wednesday July 13, 2022 , 4 min Read

இந்தியாவில் பட்டப்படிப்பு அளவில் அதிகம் நாடப்படும் பாடப்பிரிவுகளில் பொறியியல் நான்காவது இடத்தில் உள்ளது. எனினும், தொழில்துறைக்கு தேவைப்படும் திறன்களுக்கும், பல்கலைக்கழங்களில் கற்றுத்தரப்படும் திறன்களுக்கும் தொடர்பில்லாத தன்மை இருக்கிறது.

ஆண்டுதோறும் 15 லட்சம் பொறியாளர்கள் வெளியே வரும் நிலையில், 80 சதவீதம் பேர் பணியில் சேர்வதற்குத் தேவையான திறன்கள் இல்லாமல் இருப்பதாக ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் சர்வே தெரிவிக்கிறது.

சூரியநாராயணன் பன்னீர்செல்வம் (சூரியா) மற்றும் சாரங்கராஜன் அமெரிக்காவுக்கு படிக்கச்சென்ற போது இதை நேரடியாக உணர்ந்தனர்.

இதன் விளைவாக அவர்கள், சென்னையைச்சேர்ந்த பொறியியல் கல்விநுட்ப நிறுவனமான ஸ்கில்- லிங்க் (Skill-Lync) நிறுவனத்தை 2018ல் Empower X என நிறுவினர். மாணவர்கள் தங்கள் துறைகளில் தேவையான தொழில்நுட்பத் திறன்களை பெற தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டுதலை நிறுவனம் வழங்குகிறது.

ஸ்கில்

புதிய எண்ணம்

சென்னை புனித ஜோசப் பொறியியல் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்த போது சூரியா இதன் மூலம் மட்டும் தனது பாடப்பிரிவில் வேலை பெற முடியாது என உணர்ந்தார்.

அமெரிக்காவில் மாஸ்டர்ஸ் பயில தீர்மானித்தார். அங்கு படிக்கச்சென்ற போது, நடைமுறை திறனை பட்டப்படிப்பு வழங்கவில்லை என உணர்ந்தார். 2012ல் ஆசிரியர் பயிற்றுனராக இருந்த போது, அவர் அழகப்பா செட்டியார் பொறியியல் – தொழில்நுட்ப கல்லூரியில் பட்டம் பெற்று மாஸ்டர்ஸ் படித்துக்கொண்டிருந்த சாரங்கராஜனை சந்தித்தார். அவர் இந்தியாவில் இருந்து வரும் புதிய மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வழிகாட்டிக் கொண்டிருந்தார்.

அவரும் சூரியாவும் இணைந்து பொறியியல் மாணவர்கள் தாங்களாகவே திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் சேவையை வழங்க தீர்மானித்து தமிழ்நாட்டு மாணவர்களில் இருந்து துவங்கினர்.

இந்தியாவுக்கு வந்திருந்த போது, சூரியா தனது கல்லூரிக்குச்சென்று அங்கிருந்த மெக்கானிகல் மாணவர்கள் சிலருக்கு பயிற்சி அளிப்பதாகத் தெரிவித்தார். சாரங்கராஜனின் வீடியோக்களையும் எடுத்து வந்திருந்தார். முன்னோட்ட அடிப்படையில் அவர்கள் மூன்று மாதங்களுக்கு 30 மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

“இந்த மாணவர்கள் அனைவரும் தங்கள் துறைகளில் பணி வாய்ப்பை பெற்றனர். மேலும், பல மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கல்லூரி கேட்டுக்கொண்டது,” என்று ஸ்கில் லிங்க் இணை நிறுவனர் சூரியா யுவர்ஸ்டோரியிடம் கூறினார்.

ஃபேஸ்புக் குழுவாக துவங்கிய் பின்னர் யூடியூப் சேனலாக மாறி அதில் பாடங்களை பதிவேற்றினர்.

2015ல் அவர்கள் தமிழ்நாட்டில் 12 பல்கலைக்கழகங்களில் உள்ள 300 மாணவர்களுக்கு ஸ்கைப் மூலம் பாடம் நடத்தினர். நிறுவனர்கள் இருவருக்கும் முழுநேர வேலை கிடைத்தாலும் தொடர்ந்து பாடம் நடத்தினர்.

மாணவர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பை அடுத்து அவர்கள் பணியில் இருந்து விலகி இந்தியா திரும்பினர். 2018ல், அவர்கள் ஸ்கில் லிங்க் மேடையை துவக்கினர். தற்போது நிறுவனம் இந்தியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் 30,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.                                           

திறன்

செயல்பாடு

Coursera மற்று Edex போல, நிறுவனம் மாணவர்களுக்கு பயிற்சி பாடங்களை அளிக்கிறது.

“கல்லூரிகளில் நடத்தப்படுவது தவிற பொறியியல் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கிறோம். இதன் மூலம் மேற்படிப்பு அல்லது வேலைக்குத் தேவையான திறன்களை பெறுகின்றனர்,” என்கிறார் சூரியா.

இரண்டு முதல் பத்து மாதங்களில் முடிக்கக்கூடிய பாடத்திட்டங்களை இந்த ஸ்டார்ட் அப் வழங்குகிறது. மாணவர்கள் குறைந்தது 20 பிராஜெட்களை முடிக்க வேண்டும்.

“இந்த பிராஜெட்கள் விரிவானவை மற்றும் அனைத்து பாடத்திட்டங்கள் தொடர்பானவை. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு அறிமுகம் பக்கம் வழங்கப்படுகிறது. அதில் பிராஜெக்ட் விவரங்கள் இடம்பெறும். இதை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்,” என்கிறார்.

பாடத்திட்டம் முடிந்ததும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறவும் உதவுகிறது. நிசான், ரெனால்ட், டாடா, மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளது. இந்த பாடத்திடங்கள் அனைத்தும், 1700 துறை சார்ந்த வல்லுனர்களால் உருவாக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் அனுபவம் கொண்ட 200 தொழில்நுட்ப பொறியாளர்கள் மூலமும் மாணவர்களுக்கு உதவுகிறது. நேர்காணல், நம்பிகை நடவடிக்கை ஆகியவற்றில் உதவும் குழுவையும் நிறுவனம் கொண்டுள்ளது. இந்நிறுவனம் 2500 ஊழியர்களைக் கொண்டுள்ளது. 40 பேர் தொழில்நுட்பப் பிரிவில் உள்ளனர்.

வர்த்தக மாதிரி

நிறுவனம் பல்வேறு கட்டண மாதிரிகளை அளிக்கிறது. மாதம் ரூ.10,000 அடிப்படை திட்டமாக இருக்கிறது. ரூ.30,000 மற்றும் ரூ.35000 என அடுத்த கட்ட கட்டணங்கள் அமைகின்றன. இவை 10 மாதங்களுக்கு ஆனது. அடிப்படைத் திட்டத்தில், வேலைவாய்ப்பு உதவியை நிறுவனம் வழங்குவதில்லை.

மாணவர்கள் கட்டண நிதி உதவி பெற வங்கிசாரா நிதி நிறுவனங்களுடனும் கூட்டு வைத்துக் கொண்டுள்ளது. ஆண்டு அடிப்படையில் 30 மில்லியன் டாலர் எனும் வளர்ச்சி பெற்றிருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. 2021ல் இது பார்ட்னர்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு உதவி மூலம் 200 மடங்கு பலன் பெற்றது.

2019 வரை நிறுவனம் மெக்கானில் பொறியாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தியது. 2020ல் மற்ற பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்தது. 2021ல் மேலும் விரிவாக்கம் செய்து, சர்வதேச அளவில் பதிவுகளில் 3 மடங்கு வளர்ச்சி பெற்றது.

ரெனால்டு நிசான், ஆல்டைர், எக்ஸ்பிலியோ போன்ற நிறுவனங்கள் கூட்டு மூலம் நிறுவனம் 1000க்கு மேலான பொறியாளர்கள் திறன் பெற உதவியுள்ளதாக Skill-lync தெரிவிக்கிறது.

2021 நவம்பர் முதல் 1,000 ஊழியர்கள் நியமனம் மூலம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு நிறுவனம் ஏ சுற்று நிதியான 20 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. ஐயன் பில்லர், ஒய் காம்பினேட்டர், பெட்டர் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. Y Combinator திட்டம் மூலம் மேலும் நிதி பெற்றது.

கல்வி

சந்தை வாய்ப்புகள்

பெருந்தொற்று சூழலின் டிஜிட்டல்மயமாக்கல் விளைவாக, ஆன்லைன் கல்வி கவனம் பெற்றுள்ளது. கல்வி நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்தியாவில் 2018ல் 39 பில்லியனாக இருந்த ஆன்லைன் கல்வி 2024ல் 360 பில்லியன் டாலராக உயரும் என ஸ்டேஸ்டா தெரிவிக்கிறது.

2020ல் 12வது வகுப்பு வரையான சந்தை 1.16 பில்லியன் டாலராக இருந்ததாகவும் ஸ்டேஸ்டா தெரிவிக்கிறது. நாட்டில் திறன் வளர்ச்சி சந்தை 500 மில்லியன் டாலர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

2020ல் மொத்த சந்தையும் 2.8 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிலையில் 2025ல் இது 10.4 பில்லியன் டாலராக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ல் நேர்மறையான ரொக்க நிலை பெற இருப்பதாகத் தெரிவிக்கும் சூரியா, ஏற்கனவே வருவாய் நேர்நிறையாக இருப்பதாக சொல்கிறார். இந்திய பொறியாளர்கள் 5 முதல் 6 சதவீதம் வரை சென்றடைய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“10 ஆண்டுகளில் மாற்று கல்விக்கான முன்னணி மேடையாக இருப்போம் என்று அவர் நம்பிக்கையோடு,” கூறுகிறார்.

ஆங்கிலத்தில்: ஐஸ்வர்யா லட்சுமி | தமிழில்: சைபர் சிம்மன்