சென்னை ஃபின்டெக் IppoPay நிறுவனத்திற்கு புதிய சி.ஓ.ஓ நியமனம்!
நிதி நுட்பம் ஸ்டார்ட் அப் நிறுவனமான இப்போபே, தனது வளர்ச்சி பாதை திட்டங்களுக்கு ஏற்ப புதிய சி.ஓ.ஓ நியமனத்தை அறிவித்துள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் நிதி நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான 'இப்போபே' (
) தனது விரிவாக்கத்தின் ஒரு அங்கமாக அதிஷ் ஷேலரை புதிய சி.ஓ.ஓவாக நியமிப்பதாக அறிவித்துள்ளது.சென்னையைச்சேர்ந்த நிதி நுட்ப நிறுவனமான இப்போபே, வர்த்தக நிறுவனங்கள், சிறு தொழில்கள், பிரிலான்சர்களுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. அனைத்து வகையான நிறுவனங்களுக்குமான ஒருங்கிணைந்த பேமெண்ட் சேவைகளை வழங்கும் நியோபேங்காகவும் திகழ்கிறது.
சில அண்டுகளுக்கு முன் ஏழு ஊழியர்களுடன் செயல்பட்ட நிறுவனம், இன்று 200க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டதாக வளர்ந்து, விரிவடைந்து வருகிறது. இதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அதிஷ் ஷேலர் (Atish Shelar) சி.ஓ.ஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
“இந்தியாவில் டிஜிட்டல் பண பர்வர்த்தனை செயல்முறை, விற்பனையின் செயல்பாடுகளில் அதிஷ் மிகுந்த அனுபவம் கொண்டுள்ளார். இப்போபே நிறுவனத்தின் அதிகார படிநிலையில் அவர் சி.ஓ.ஓவாக வருவது உற்சாகம் அளிக்கிறது,” என நிறுவன சி.இ.ஓ மோகன் கூறியுள்ளார்.
சி.ஓ.ஓவாக நியமிக்கப்படும் அதிஷ், இந்தியாவில் 50 முன்னணி பேமெண்ட் தொழில்முறை வல்லுனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்த துறையில் அவருக்கு 15 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. இந்தியாவில் பேமெண்ட் கேட்வே ஆரம்ப நிலையில் இருந்த சூழலில் எச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் பேமெண்ட் கேட்வே சேவையின் ஆரம்பக் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
“ஆப்லைன் மற்றும் ஆன்லைன் பேமெண்ட் பரப்பில் வேகமாக வளரும் நிறுவனங்களில் ஒன்றாக இப்போபே இருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு வலுவான திட்டங்களை நிறுவனம் கொண்டுள்ளது. இந்த சூழலில் நிறுவனத்தில் இணைவதை உற்சாகமாக எதிர்கொள்கிறேன்,” என்று அதிஷ் கூறியுள்ளார்.