ஆன்லைன் பேமண்ட் மோசடிகளை தடுக்கும் Tutelar நிறுவனத்தை வாங்கியது Ippopay
பண பரிவர்த்தனை உள்கட்டமைப்பு ஸ்டார்ட் அப்பான இப்போபே செயற்கை நுண்ணறிவு சார்ந்த இடர் நிர்வாக சேவை நிறுவனம் Tutelar – ஐ கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
சென்னையைச்சேர்ந்த பண பரிவர்த்தனை உள்கட்டமைப்பு ஸ்டார்ட் அப் ஆன ‘இப்போபே’ ‘
' செயற்கை நுண்ணறிவு சார்ந்த இடர் நிர்வாக சேவை நிறுவனம் Tutelar – ஐ கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.Tutelar நிறுவனம், பணப் பரிவர்த்தனை சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ்நேர கேஒய்சி (KYC) மற்றும் பரிவர்த்தனை மோசடி கண்டறிதல் சார்ந்த சேவைகளை அளிக்கிறது.
இடர் இல்லாத உறுப்பினராக்கம் (ஆன்போர்டிங்), முறையீடுகள் தீர்வு, பரிவர்த்தனை மோசடி தடுப்பு, தவறான சேவை விற்பனை தடுப்பு ஆகியவற்றை வழங்குகிறது. வணிகர்கள் மற்றும் வங்கிகளுக்கு இதன் மூலம் பலன் அளிப்பதோடு, இடைப்பட்ட நிறுவனங்கள், நிதி நுட்ப நிறுவனங்கள், பேமெனெட் பிராசஸர் ஆகியவற்றுக்கும் பலன் அளிக்கிறது.
“இப்போபே உருவாக்கி வரும் முழு அளவிலான உள்கட்டமைப்பு ஸ்டாக்கிற்கான முதல் மற்றும் முக்கியமான கையகப்படுத்தலாக Tutelar அமைகிறது. கே.ஒய்.சி மற்றும் பரிவர்த்தனை மோசடி, இடர் நிர்வாகம் ஆகியவை ரிசர்வ் வங்கி, பேமெண்ட் கார்ப்பரேஷன் தீர்வு காண விரும்பும் முக்கியப் பிரச்சனைகளாக இருக்கின்றன. Tutelar எங்களுடன் இணைவது பேமெண்ட் பரப்பில் மோசடிகளை எதிர்கொள்வதில் இப்போபே நிறுவனத்திற்கு முக்கிய பலமாக அமையும்,” என்று இப்போபே சி.இ.ஓ கே.மோகன் கூறியுள்ளார்.
Tutelar நிறுவனர் மற்றும் Aggrepay முன்னாள் சி.இ.ஓ பிரதீப் குமாரை இப்போபே குடும்பத்திற்கு வரவேற்பதிலும் மகிழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
“பல்வேறு துறைகளில், குறிப்பாக வங்கிகள் மற்றும் இடைப்பட்ட சேவை நிறுவனங்களை பாதிக்கும் பேமெண்ட் மோசடிகளை கட்டுப்படுத்த மற்றும் கண்டறிதல் நோக்கத்தோடு இந்த சேவையை உருவாக்கினோம். எங்கள் பார்வையுடன் இணைந்து இந்த சேவையை உலக அளவில் கொண்டு செல்லக்கூடிய நிறுவனத்தை எதிர்பார்த்திருந்தோம். Ippopay எங்களுக்கான சரியான இடமாக இருக்கும் என நம்புகிறேன்,” என Tutelar நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பிரதீப் குமார் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan