ஆழ் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் ‘Planys Technologies' ரூ.43 கோடி நிதி திரட்டியது
ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் மைய ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஆழ் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘பிளானைஸ் டெக்னாலஜிஸ்’ பிரபல முதலீட்டாளர் அசிஷ் கச்சோலியா தலைமையிலான சமபங்கு நிதி சுற்றில் ரு.43 கோடி நிதி திரட்டியுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் மைய ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஆழ் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் '
' பிரபல முதலீட்டாளர் அசிஷ் கச்சோலியா தலைமையிலான சமபங்கு நிதி சுற்றில் ரு.43 கோடி நிதி திரட்டியுள்ளது.இந்த நிதி சுற்றில், சமர்த்தயா அட்வைசர்ஸ், கோல்டன் பிர்ச் அட்வைசர்ஸ், காக்னிபை ஏஞ்சல் பண்ட்ஸ், கிருஷ்ணா டிபென்ஸ், இம்பாக்ட் இந்தியா இன்வெஸ்ட்மெண்ட் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களும் தங்கள் நிதியை அதிகமாக்கியுள்ளனர்.
முதல் சுற்று விதை முதலீட்டாளர்கள் வெளியேற்றமும் நிகழ்ந்தது. இந்த முதலீடு, Planys நிறுவனத்தின் நோக்கமான, உள்கட்டமைப்பு பரிசோதனையில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவதை மேலும் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோபோடிக்ஸ், தண்ணீருக்கடியே சோதனை, டிஜிட்டல் அனல்டிக்ஸ் ஆகிய நுட்பங்கள் மூலம் இதை சாத்தியமாக்குகிறது.
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரும், பேராசிரியருமான தனுஜ் ஜுன்ஜின்வாலா, வினீத் உபத்யா, பேராசிரியர் பிரபு ராஜகோபால், கிருஷ்ண பாலசுப்பிரமணியன் ஆகியோரால் துவக்கப்பட்ட Planys, செண்டர் பார் நான் டிஸ்டிரக்டிவ் இவால்யூவேஷன் மையத்தில் இருந்து கிளை விட்டு உருவானது (CNDE), IITM. அடுத்த சில ஆண்டுகளில் ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் மையத்தில் அதிகாரப்பூர்வமாக நிறுவனமாக உருவானது. இந்நிறுவனம் ரூ.1.75 கோடி நிதி திரட்டி பல்வேறு சேவைகளை உருவாக்கியது.
நிறுவனம் இன்று இந்தியாவின் மரைன் ரோபோடிக் பிரிவில் முன்னணியில் திகழ்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து கண்காணிப்பது அவசியமாகிறது. பிளாமைஸ் நிறுவனம் சொந்த தண்ணீருக்கடியில் டிரோன் நுட்பத்தை பயன்படுத்தி, எஃகு மற்றும் கான்கீரிட் அமைப்புகளுக்கான பரிசோதனைகளை வழங்குகிறது. ஏஐ நுட்பம் கொண்டு தரவுகளை அலசுகிறது.
”இந்நிறுவனம் எதிர்க்லாத்தில் சர்வதேச சந்தையில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. செயல்முறை திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தண்ணீருக்கடியில் சோதனை செய்யும் தீர்வுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளொம்,” என்று நிறுவன முதன்மை தொழில்நுட்ப அதிகாரி வினீத் கூறினார்.
"Planys மிகப்பெரிய தண்ணீருக்கடியில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை கண்காணித்து பராமரிக்கும் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பம் சார்ந்த சேவையை அளிக்கிறது.
அணைகள், பாலங்கள், சுத்திகரிப்பு மையங்கள் போன்றவற்றின் பராமரிப்பில் உதவி வருகிறது. கல்வி நிறுவன ஆய்வு சிவில் மற்றும் பாதுகாப்பு துறையில் பயன்படுவதற்கான உதாரணமாக இது அமைகிறது, என்று முதலீட்டாளர் அசிஷ் கச்சோலியா கூறினார்.
நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்டீர்ஸ், ஐஓசிஎல், பிபிசில், இந்திய ரெயில்வே உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதரவை பெற்றுள்ளது. இதன் நுப்டம் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச அளவில் கூட்டு முயற்சி மூலம் சேவை அளிக்கிறது.
Edited by Induja Raghunathan