Covaxin தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு - பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!
ஒருவேளை உங்களுக்கு தடுப்பூசி மூலம் பாதிப்பு ஏற்படுள்ளது என நிரூபிக்கப்பட்டால், இழப்பீடு செலுத்தப்படும், என ஒப்புதல் படிவத்தில் குறிப்பிட்டுள்ளது பாரத் பயோடெக்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. அதன்படி, முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபருக்கு பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு தரப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழவதும் 55 லட்சம் டோஸ் Covaxin வழங்குவதற்கான கொள்முதல் ஆணையை அரசிடமிருந்து பெற்றுள்ளது பாரத் பயோடெக் நிறுவனம். தடுப்பூசியை செலுத்திக் கொள்பவருக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிகப்பபட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுவர்.
அந்த படிவத்தில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் சார்பில்,
”கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் செலுத்திக்கொண்ட பின், உங்களுக்கு ஏதேனும் மோசமான அல்லது கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் / மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு உங்களுக்கு வழங்கப்படும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
‘’ஒருவேளை உங்களுக்கு தடுப்பூசி மூலம் பாதிப்பு ஏற்படுள்ளது என நிரூபிக்கப்பட்டால், ஸ்பான்சர் (பிபிஐஎல்) மூலம் செலுத்தும் இழப்பீடு செலுத்தப்படும்,” என அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவச் சோதனைகளில், கோவாக்சின் COVID-19 க்கு எதிராக ஆன்டிடோட்ஸ்களை உற்பத்தி செய்யும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசியின் மருத்துவ செயல்திறன் இன்னும் நிறுவப்படவில்லை. இது இன்னும் 3 ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று என்று கூறப்பட்டுள்ளது.
”இந்த தடுப்பூசி செலுத்தியப பின், கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தேவையில்லை என புரிந்துகொள்ள வேண்டாம்,” என்று அந்த படிவத்தில் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, மருத்துவப் பரிசோதனை முறையில் இருக்கும்போது தடுப்பூசி நிர்வகிக்கப்படுவதால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டால் மக்களுக்கு இழப்பீடு வழங்குவது நிறுவனத்தின் பொறுப்பாகும்.
இதற்கிடையில், பாரத்பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா தனது ட்விட்டர் கணக்கில்,
"கோவாக்சின் & பாரத் பயோடெக் நிறுவனம் தனது தேசத்துக்கு சேவை செய்வதில் பெருமைப்படுகிறது. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களையும் பெருமைபடுத்துகிறது,” என தெரிவித்துள்ளார்.