Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் 'ஜன் தன் யோஜனா' 10 ஆண்டுகள் நிறைவு- பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டமானது குறைந்தபட்ச இருப்புத் தேவைகள் இல்லாத அடிப்படை வங்கிக் கணக்குகளையும், ரூ. 2 லட்சம் விபத்துக் காப்பீட்டுடன் இலவச ரூபே டெபிட் கார்டுகளையும், கணக்குத் திறப்பு அல்லது பராமரிப்புக் கட்டணமின்றி ரூ.10,000 வரையிலான ஓவர் டிராஃப்ட் வசதியையும் வழங்குகிறது.

ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் 'ஜன் தன் யோஜனா' 10 ஆண்டுகள் நிறைவு- பிரதமர் மோடி பெருமிதம்!

Thursday August 29, 2024 , 2 min Read

2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்க தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

குடும்பத்துக்கு ஒரு வங்கிக் கணக்கு தொடங்கும் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டமானது குறைந்தபட்ச இருப்புத் தேவைகள் இல்லாத அடிப்படை வங்கிக் கணக்குகளையும், ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீட்டுடன் இலவச ரூபே டெபிட் கார்டுகளையும், கணக்குத் திறப்பு அல்லது பராமரிப்புக் கட்டணமின்றி ரூ.10,000 வரையிலான ஓவர் டிராஃப்ட் வசதியையும் வழங்குகிறது.

PM Modi

இது தொடர்பாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருப்பதாவது,

நாம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தினத்தை கொண்டாடுகிறோம். அதுதான் ஜன் தன் திட்டத்தின் 10 ஆண்டு நிறைவு.

இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள். ஜன்தன் யோஜனா அனைவருக்குமான நிதியுடைமை என்னும் அனைவரையும் உள்ளடக்கும் அம்சங்களை அதிகரிப்பதிலும், கோடிக்கணக்கான மக்களின் கண்ணியத்தைக் காப்பதிலும் முதன்மை வகிக்கிறது.” என்றார்.

ஆகஸ்ட் 14, 2024 நிலவரப்படி, இத்திட்டமானது 53.13 கோடி கணக்குகளைக் கொண்டுள்ளது. மொத்த வைப்புத் தொகை ரூ.2.3 லட்சம் கோடி இந்த நிதியாண்டில், மூன்று கோடிக்கும் அதிகமான ஜன் தன் கணக்குகளைத் திறக்க இலக்கு கொண்டுள்ளது. இந்தக் கணக்குகளில் அதிக அளவில் இருப்பு இருக்கும் மாநிலங்களில் மது, புகைப் பழக்கம் மற்றும் குற்றச் செயல்கள் கணிசமாக குறைந்திருப்பதாக கடந்த 2021-ல் எஸ்பிஐ வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

2011-ம் ஆண்டில் இந்தியாவில் 35% மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருந்தனர், ஜன் தன் யோஜனாவுக்குப் பிறகு இது 78% ஆக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. மொத்த கணக்குகளில் பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தில் 55.6% பெண்கள் வைத்திருக்கும் கணக்குகள்.

66.6% கணக்குகள் கிராமப்புறம் அல்லது புறநகர்ப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன. 99.95% மக்கள் வசிக்கும் கிராமங்கள் இப்போது 5 கிமீ சுற்றளவில் வங்கி வசதிகளைக் கொண்டுள்ளன.

நிதியுடைமையில் அனவரையும் உள்ளடக்குவதைத் தவிரஇந்தத் திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் அடல் பென்ஷன் யோஜனா மூலம் சமூகப் பாதுகாப்பை அளிக்கிறது.

ஜன் தன் திட்டம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும். பன்னாட்டு நிதியமும் உலக வங்கியும் இதனை பாராட்டியுள்ளன.

பிரதமரின் ஜன் தன் யோஜனா அதன் இரண்டாவது பத்தாம் ஆண்டில் நுழையும் போது, ​​வங்கிக் கணக்கற்ற மீதமுள்ள மக்களையும் சென்றடைவதையும், நிதிச் சேவைகளை விரிவுபடுத்தவுள்ளது. இதன் மூலம் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நிதி எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் பங்கை உறுதிப்படுத்துகிறது.