'கொரோனா தடுப்பு மருந்தின் விலை இதுதான்'- ரகசியத்தை உடைத்த சீரம் மையம்!
உலகின் மிகப்பெரிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் இந்தியாவின் சீரம் நிறுவனம் முதலில் அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சியின் கோவிட் -19 தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பதற்கு முன்பு இந்தியர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்தும் என்று சீரம் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
"முதலில் நம் நாட்டை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். பிறகுதான் மற்ற நாடுகள், தொடர்ந்து அவர்களுடனான ஒப்பந்தங்கள்,” என்று ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.
தடுப்பூசிக்கான கொள்முதல் ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து சீரம் நிறுவனம் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருகிறது.
2021ல் முதல் காலாண்டில் இந்தியாவின் தனியார் சந்தையில் மருந்து விற்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா தயாரிக்கும் தடுப்பூசி 90% பயனுள்ளதாக இருக்கும் என்றும், இது தொற்று நோயக்கு எதிரான உலகின் போராட்டத்துக்கான ஆயுதம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மலிவானது, விநியோகிப்பதற்கு எளிதானது என்றும் ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் தடுப்பு மருந்தை வெளியிடுவதற்கான முழு ஒப்புதலைப் பெறப்படும். இந்தாண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் பெறப்படும் என பூனவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய தனியார் சந்தையில் இந்தத் தடுப்பு மருந்தின் விலை 1,000 ரூபாய் (13.50 டாலர்) விலை இருக்கும். ஆனால் பெரிய அளவில் விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் அரசாங்கங்கள் அதை குறைந்த விலையில் வாங்கக்கூடும் என்று அவர் கூறினார்.
அஸ்ட்ராஜெனெகா உடனான உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐந்து டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் நேரடி இருதரப்பு ஒப்பந்தங்களை பெற சீரம் நிறுவனத்துக்கு உரிமம் உண்டு. ஜூலை 2021 க்குள் சீரம் நிறுவனம் சார்பில் 400 மில்லியன் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதைத்தொடர்ந்து அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் சீரம் நிறுவன தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
தகவல்: யுவர்ஸ்டோரி | தமிழில்: மலையரசு.