Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ஊழியர்களுக்கு 2.8 லட்சம் பங்குகள் ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்த Paytm!

இந்த ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, Paytm இன் மொத்தமாக வெளியிட்ட சந்தா செலுத்தப்பட்ட மற்றும் பெய்ட்-அப் ஈக்விட்டி பங்கு மூலதனம் ரூ. 635,992,696 இலிருந்து ரூ. 636,274,090 ஆக அதிகரித்துள்ளது.

ஊழியர்களுக்கு 2.8 லட்சம் பங்குகள் ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்த Paytm!

Tuesday July 09, 2024 , 1 min Read

பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஊழியர் பங்குத் தெரிவுத் திட்டமான ESOP-இன் கீழ் ஊழியர்களுக்கு 2,81,394 பங்குகளை ஒதுக்க தங்களது நாமினேஷன் மற்றும் ரெம்யூனரேஷன் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளதாக பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜூலை 7ம் தேதி அளித்த ஒப்புதலின்படி, 2019 ESOP-இன் கீழ் 2,78,858 பங்குகள் மற்றும் 2008 ESOP-இன் கீழ் 2,536 பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, Paytm இன் மொத்தமாக வெளியிட்ட , சந்தா செலுத்தப்பட்ட மற்றும் பெய்ட்-அப் ஈக்விட்டி பங்கு மூலதனம் ரூ.635,992,696 இலிருந்து ரூ.636,274,090 ஆக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பங்கின் முகப்பு மதிப்பு ரூ.1 என்பது குறிப்பிடத்தக்கது. பிரீமியம் ரூ.8 உட்பட ஒரு பங்கின் உரிமைப்பயனீட்டு விலை ரூ.9 ஆக ஆகும்.

paytm

இந்தச் செய்தியை வெளியிடும் போது, ​​ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 8.5% உயர்ந்து ஒரு பங்கிற்கு ரூ.474 ஆக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி Paytm Payments வங்கியின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்ததையடுத்து 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு பேடிஎம் பங்குகள் சரிவு கண்டன. பிறகு இப்போது படிப்படியாக உயர்ந்து வந்துள்ளன.

கடந்த வாரம் உணவு டெலிவரி நிறுவனமான ஜோமாட்டோ ஊழியர் தெரிவுப் பங்குத் திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததாக அறிவித்த போது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு முதலீட்டாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஒப்புதல் பெற்றுவிட்டதாக பங்குச்சந்தையில் ஜோமாட்டோ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதன் காலாண்டு வருவாய் அறிக்கையில், ஜோமாட்டோ நிறுவனம் தனது நிலுவைப் பங்குமூலதனத்தில் 2% என்று 18.26 கோடி ஊழியர் பங்குத் தெரிவுத் திட்டத்தை அறிவித்தது. ரூ.208 என்ற இறுதிகட்ட பங்கு விலையில், இந்த ESOP-களின் மதிப்பு ரூ.3,800 கோடியாக இருக்கும்.

சில வாரங்களுக்கு முன்னர் பேடிஎம்-ன் நிகழ்வுகள் மற்றும் டிக்கெட் வர்த்தகத்தைக் கையகப்படுத்தும் பேச்சு வார்த்தை கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருப்பதாக ஜோமாட்டோ தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.